Tuesday, January 28, 2025

GSTPS : குடியரசு தினவிழாவை ஒட்டி பண்பாட்டு நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது!


வணக்கம்.  குடியரசு தின விழாவை ஒட்டி, நம்முடைய சொசைட்டி சார்பில் நான்காம் ஆண்டு பண்பாட்டு விழா நேற்று (25/01/2025)  உறுப்பினர்களும், உறுப்பினர்களுடைய குழந்தைகளும், சொந்தங்களும் திரளாக கலந்துகொள்ள சிறப்பாக நிறைவேறியது.

 

நிகழ்வை துவங்கும் பொழுது, செந்தமிழ்ச்செல்வன் அவர்களL் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கும், GSTPS சார்பாக புத்தக அறிமுக விழா ஒன்றை நிர்வாகிகள் சிறப்பாக நடத்தினார்கள்.  நிர்வாகிகளுக்கும், அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி துவங்கினார்.

 

முதல் குடியரசு தின விழாவை நமது சொசைட்டியில் துவங்கும்பொழுது,  கொரானா காலத்தை ஒட்டி, இணைய வழியில் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தோம்.   இந்த நிகழ்வை நமது உறுப்பினர்களின் தனித்திறமையை, உறுப்பினர்களின் குழந்தைகளின் திறமையை உற்சாகப்படுத்துவதற்காக நடத்துகிறோம் என்றார்.

 

நிகழ்வுகளின் மொத்த தொகுப்பையும் பொருளாளர் செல்வராஜ் சிறப்பாக தொகுத்து வழங்கியதை சிறப்பாக செய்தார்.

 

Dr. வில்லியப்பன் அவர்களின் பேத்தியும், உறுப்பினர் இராஜலெட்சுமியின் குட்டி மகளுமான பிரகதி ஒரு பாடல் பாடி துவங்கி வைத்தார். செல்வராணி அவர்களின் மகள் யாமினி சுதந்திர போராட்ட பெண் போராளி வேலு நாச்சியார் குறித்த ஒரு குறிப்பைத் தந்தார்.

 

இதில் பொன்மணி அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஆடல், பாடல், ஓவியம்  என பல கலைகளிலும் அசத்தினார்கள். 

 

அவர்களின் ஒரு குட்டிப் பெண் ரோசனா யோகாவில் ஒரு சாதனை முயற்சி செய்தார்.  பொதுவாக பொது இடங்களில் சிரமமான யோக ஆசனங்களை செய்து காட்டுகிறார்கள். அதனால், வயதானவர்கள், கொஞ்சம் உடற்பருமன் கொண்டவர்கள் எல்லாம் யோகா என்றாலே கொஞ்சம் ஜெர்க் ஆகிறார்கள். யோகா எல்லா வயதினருக்குமானது.  நமது தனிப்பட்ட உடல் பிரச்சனைகளை ஒட்டி கூட எளிமையான ஆசனங்கள் நிறைய உண்டு. அதை செய்வதின் மூலம் குணப்படுத்தவும் செய்யலாம்.   

 

சாய் கேசவன் சிலம்பாடினார். மோக்சிதா ஸ்பானிஷ் பாடலுக்கு நடனமாடினார். இனிமையாக திருப்புகழும் பாடினார். அமிர்தவாணியும் ஸ்டைலாக நடனமாடினார். தீபக் சாய் அருமையாக பாடினார்.

 

ஜோஷ்வா, ஜோகன் ஓவியங்களிலும் அசத்தினார்கள்.  ஜியனா ஜேயல் இரு காக்கா கதைகளை தன் மழலையில் இனிமையான .  சின்ன தம்பி முகேஷ் சிலம்பம், இன்னும் சில சிரமமான அம்சங்களை அநாசயமாக கையாண்டார்.

 

உறுப்பினர் நீலகண்டன் அவர்கள் இரண்டு பாடல்களை கரோகியின் உதவியுடன் பல வித அபிநயங்களுடன் சிறப்பாக பாடினார்.   சில சமயங்களில் படத்தில் வரும் பாடலை விட, பாடலை பதிவு செய்வது புகழ்பெற்றுவிடும்.  அப்படியான பதிவாக இருந்தது.  

 

நமது சொசைட்டியிஒன் ஆஸ்தான கவி கைலாசமூர்த்தி இரண்டு கவிதைகள் வாசித்தார். ஒன்று வரி ஆலோசகர்களின் தொழில் சிக்கலை நொந்து பாடினார்.  எத்தனை புகழ்பெற்ற இலக்கிய வகைகளை எழுதினாலும், எழுதுகோலைப் பற்றி பாடியது குறைவு. ஆகையால் பாடுகிறேன் என ஒரு கவிதை வாசித்தார்.

 

கைலாசமூர்த்தி எழுதுகிறார். அவரைப் போல நாமும் எழுதுவோமோ என உறுப்பினர் முனியசாமி முயன்று எழுதிய கவிதை “நாம் எப்பொழுது வாழப்போகிறோம்”. அது ”இன்ஸ்டண்ட் கவிதை” எனலாம்.   நன்றாக இருந்தது.

 

ஜெயக்குமார் அவர்களுடைய மகன் சந்தோஷ்குமார் படங்களின், வெப் சீரிஸ் குறித்த விமர்சனங்களை அருமையாக செய்துவருகிறார். அதில் மூன்றை சுருக்கமாக அறிமுகம் செய்துவைத்தார்கள்.

 

நாம் சொந்த தொழில் வாழ்வில் மூழ்கிவிடுகிறோம்.   குழந்தைகளின் திறன்களையும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது மேடைகள் அமைத்து தருவதும் பெற்றோர்களுடைய கடமை தான். அதை புரிந்துகொண்டு வருங்காலங்களில் செயல்படுவோம்.

 

கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்து வைத்தார் இணைச்செயலர் செண்பகம். அவர்கள்.


நன்றி.


- GSTPS


நிகழ்ச்சியை நமது யூடியூப் சானலில் காணலாம்.


https://www.youtube.com/watch?v=7yJnx0yyP_Y


Wednesday, January 15, 2025

GSTPS : செந்தமிழ்ச்செல்வன் எழுதிய புத்தகம் திரளாக கலந்து கொள்ள, கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!

தலைவர் செந்தமிழ்ச்செல்வன்  எழுதிய புத்தகம்  உறுப்பினர்களும், வரி ஆலோசகர்களும், நண்பர்களும், சொந்தங்களும் என திரளாக கலந்து கொள்ள, கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!

 


ஜி.எஸ்.டி.ஆர் 1 கடைசி தேதி, பொங்கல் பண்டிகைக்கான தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், ஊருக்கு செல்வது என புறநிலையில் நெருக்கடி இருந்தாலும், அரங்கு நிறைந்த கூட்டத்துடன் துவங்கியது அருமையாக இருந்தது.

 


SS சாரின் பேத்திகள் ஆராதனாவும், அமோகாவும் தமிழ்த்தாய் பாட கூட்டம் இனிதே துவங்கியது.

 

முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் அவர்கள் பேசும் பொழுது…

 

“செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் எங்கள் ஊர்க்காரர். சொந்தக்காரர்.  ஜி.எஸ்.டி குறித்த புத்தகத்தை  எளிமையான கேள்வி பதில் வடிவத்தில் எழுதியிருக்கிறார்.  அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்துகொள்கிறேன்”  என துவங்கி, ஜி.எஸ்.டி வரி இங்கு அமுலாவதற்கு முன்பு என்ன நிலைமை, சட்ட சபையில் ஒரு மணி நேரம் உரையாற்றியது, பிறகு அமைச்சரானது,  அதற்கு பிறகு கவுன்சிலில் கலந்துகொண்டு, பல்வேறு கலாச்சார வேறுபாடு கொண்ட மாநிலங்களை கொண்டவர்களும் உறுப்பினர்களாக இருப்பதால், கலவையான அனுபவங்களை பெற்றது என்பதையும் சிறப்பாக பேசி, உடலையும் பேணிக்காப்பதில் கவனமாக இருங்கள் என அக்கறையோடு கேட்டுக்கொண்டார். கதைப்புத்தகங்களை எழுதுவதற்கு இங்கு நிறைய இருக்கிறார்கள். துறை சார்ந்து எழுதுவதற்கு தான் இங்கு ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். இப்படி ஜி.எஸ்.டி வரி ஆலோசகர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்து ஆற்றலுடையவர்களாக மாற்றும் பணியை மேற்கொண்டிருக்கிற இந்த GSTPS சொசைட்டிக்கும் வாழ்த்துகள் என வாழ்த்துப்  பேசி நூலையும் வெளியிட்டார். அவருக்கு சொசைட்டி சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 


தணிக்கையாளரும், முனைவருமான கோபாலகிருஷ்ணராஜூ அவர்கள் ஜி.எஸ்.டி குறித்து பல கூட்டங்களில் தொடர்ந்து பேசிவருகிறார்.  ஜி.எஸ்.டி வரி குறித்து  மிகுந்த கவனம் வேண்டும். அத்தனை நுணுக்கமாக கற்கவேண்டியதாக இருக்கிறது.  இந்தப் புத்தகம் அதற்கு உதவி செய்யும் என செந்தமிழ்ச் செல்வன் அவர்களை வாழ்த்தி விடைபெற்றார். அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 

கம்பெனி செக்கரட்ரியும், வழக்கறிஞருமான சீனிவாசன் அவர்கள் “25 ஆண்டுகளாக சாருடன் பழகி வருகிறேன். அவரைப் போலவே என்னையும் எழுத தூண்டியவர்.  எழுதுவது அத்தனை எளிதில்லை.  எழுத துவங்கும் பொழுது தான் அந்த சிரமங்கள் நமக்கு புரியும். துவக்கத்தில் எழுத தடுமாறிய நான், இப்பொழுது எனது எழுத்திற்காக விருது பெற்றிருக்கிறேன்.  அவரை வாழ்த்துகிறேன்” என விடைபெற்றார். அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 


உறுப்பினர் முனியசாமி பேசும் பொழுது….

 

“200 பக்கங்களில் பிழைத்திருத்தம் செய்தேன் என்பதற்காக கோவை பெருமாள் சாரோடு என்னையும் விமர்சன உரை என்ற பெயரில் அழைப்பிதழில் இணைத்திருக்கிறார்கள்.  உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்த வந்திருக்கிறேன் என சொல்லலாம்.

 

ஒரு புத்தகம் உருவாக்குவத்தில் பல படி நிலைகள் இருக்கின்றன. ஜி.எஸ்.டி சட்ட அறிவு, ஆங்கில அறிவு, தமிழ் அறிவு, பல ஆண்டுகளின் நடைமுறை அனுபவம், புத்தகத்தை கொண்டு வருவதற்கான பொருளாதாரம்,  வளர்ந்து வரும் ஆலோசகர்கள் மீதான அக்கறை, வணிகர்களுக்கு சட்டம் புரிய வேண்டும் என்ற அடிப்படையில் தான் எளிமையான கேள்வி பதில் வடிவத்தில் தந்திருக்கிறார்.  இன்னும் முக்கியமானது இன்றைய தேதி வரைக்கும் அப்டேட் செய்திருக்கிறார். பதிப்பகத்தார் தட்டச்சு செய்து தரும் பிரதிகளை பல பகல் இரவுகள் தனது துணைவியாரின் உதவியுடன் பிழைத்திருத்தங்கள் பார்த்திருக்கிறார்.

 

இத்தனை உழைப்புக்கு பிறகு புத்தகங்களை விற்கும் சிரமத்தையும் அவருக்கு தந்துவிடக்கூடாது. நமது உறுப்பினர்களும், சக வரி ஆலோசகர்களும் முயற்சிகள் செய்தால், எளிதாய் உரியவர்களுக்கு கொண்டு சேர்த்துவிடலாம். 

 


இதெல்லாம் மத்திய, மாநில அரசுகள்  செந்தமிழ்ச்செல்வன் போன்ற மூத்த வரி ஆலோசகர்களிடம்  சில லட்சங்களை கொடுத்து இந்த வேலையை செய்து வணிகர்களிடம் கொண்டு சேர்திருக்கவேண்டும்.  அரசுகள் செய்யவேண்டியதை தனிநபராக தனது சக வரி ஆலோசகர்களின் துணையுடன் கொண்டு வருகிறார் என்பது தான் முக்கியமானது.” என பேசி முடித்தார். அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 

இந்த புத்தக அறிமுக நிகழ்வை இத்தனைச் சிறப்பாக ஏற்பாடு செய்த GSTPS நிர்வாகிகளுக்கும்,  புத்தகத்தை வெளியிட்ட திரு. பாண்டியராஜன் அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும், கலந்துகொண்ட  தன்னுடன் படித்த நண்பர்கள், வரி ஆலோசகர்கள், அரசு அதிகாரிகள் சொந்தங்கள் எல்லோருக்கும் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் நன்றி தெரிவித்து முடித்தார்.

 


கோவையைச் சேர்ந்த வரி ஆலோசகர் நஜ்முதீன் அவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பிவைத்திருந்தார். அரங்கில் வாசிக்கப்பட்டது. வரி ஆலோசகர் பெருமாள் அவர்கள்  பெருமுயற்சி செய்தும் பொங்கல் விடுமுறை போக்குவரத்து நெருக்கடியால் சென்னைக்கு வர இயலவில்லை.   தன்னுடைய உரையை காணொளியாக அனுப்பி வைத்திருந்தார். புத்தகத்திற்குள் சென்று பல முக்கிய செய்திகளை சுட்டிக்காட்டியிருந்தார். நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

 


சக வரி ஆலோசகர்கள் சால்வைகள் போர்த்தி மரியாதை செலுத்தினார்கள்.  பூங்கொத்து, பரிசு பொருட்கள் என வாழ்த்திக் கொடுத்தார்கள்.

 


புத்தகத்தை வாங்கியவர்கள் மூன்று, நான்கு என வாங்கினார்கள்.  செந்தமிழ்ச்செல்வன் அவர்களிடம் புத்தகங்களில் கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டார்கள். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள்.  

 


உள்ளே நுழையும் பொழுதே பிஸ்கட்டும், அருமையான காபியும் வழங்கப்பட்டது.   செல்லும் பொழுது, அனைவருக்கும்  SS சாரின் மகள் சார்பில் அழகான பேனா ஸ்டாண்டு ஒன்று வழங்கப்பட்டது.  சொசைட்டி சார்பில் சுவையான மைசூர் பாகும், மிக்சரும் வழங்கப்பட்டது. 

 

நிகழ்வு இனிதே நிறைவேறியது.  இந்த நிகழ்வு என்பதே பலருடைய கூட்டு உழைப்பில் தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆகையால் அனைவருக்குமே நன்றி.

 



மொத்த நிகழ்வையும் தெளிவான தமிழில் தொகுத்து வழங்கியவர் தமிழ் ஆசிரியர் சுந்தர் ராம். சில தொலைக்காட்சி  நிகழ்வுகளில், காணொலி/காணொளிகளிலும் குரல் கொடுப்பவராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

 

நன்றி.

 

-        GSTPS

 

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப்https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக்https://www.facebook.com/gstprofessionalssociety

-          


Saturday, January 11, 2025

GSTPS : புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நிறைவேறியது!

"ஜி.ஸ்.டி பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுங்கள் புத்தக வெளியீட்டு நிகழ்வு திரளான நமது உறுப்பினர்கள், நண்பர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவேறியது!"



கடந்த 05/01/2025 அன்று மாலை 3 மணிக்கு மேல்.. திட்டமிட்டப்படி சிறப்பு விருந்தினர்களாக சில திரைப்பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் என சிலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  புத்தகச் சந்தையின் வெளியீட்டு விழா மேடையில்  புத்தகத்தை வெளியிட்டார்கள்.



நமது GSTPS தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சால்வைகள் அணிவித்து மரியாதை செய்தார்கள்.


தலைவரின் குடும்பத்தினரும், நண்பர்களும், நமது சொசைட்டி நிர்வாகிகளும்,  உறுப்பினர்களும் பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை களை கட்ட வைத்தார்கள்.



நமது புத்தகத்தோடு, தணிக்கையாளர் வெங்கட்ரமணன் எழுதிய ”அறக்கட்டளைக்கான வருமான வரி விவரம்” புத்தகமும், திரு. கணேசமூர்த்தி அவர்கள் எழுதிய ”A simplified guide to GST Rates & HSN” புத்தகமும் வெளியிடப்பட்டது.   



திரு. விக்கியை புகைப்படங்கள் எடுக்க சொல்லி தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிறைய புகைப்படங்களை சிறப்பாக சுட்டுத் தள்ளினார். 


நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புற செய்த அனைவருக்கும் தலைவரே குழுவில் நன்றி தெரிவித்துள்ளார்.



”புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்தமைக்கு நன்றி” - சு. செந்தமிழ்ச் செல்வன்.



நன்றி.

Monday, January 6, 2025

“ஜி.எஸ்.டி (GST) பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்”- புத்தகம் அறிமுக விழா


அன்புள்ள
GSTPS உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும்,

 

ஜி.எஸ்.டி (GST) பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்”-  புத்தகம் அறிமுக விழா

 


வணக்கம்.    ஜி.எஸ்.டி குறித்து 53 தலைப்புகளில் தமிழில் எளிய கேள்வி பதில் வடிவத்தில்,  வரி ஆலோசகர்கள் மட்டுமல்லாமல் வணிகர்களும் கற்றுக்கொள்ளும் விதத்தில் 567 பக்கங்களில்ஜி.எஸ்.டி (GST) பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். 

 

நமது உறுப்பினர்களுக்காக இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் விழா ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடும் பொழுது, நமது நேரடிக் கூட்டத்திலேயே வெளியிடலாம் என GSTPS நிர்வாகிகள் தெரிவித்ததன் அடிப்படையில், 11/01/2025 – மதியம் 4.30 மணியளவில் அன்று நாம் வழக்கமாக கூட்டம் நடத்தும்இந்துஸ்தான் சேம்பரில்புத்தகம் குறித்த அறிமுகத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 


அன்றைய நாளில் முக்கியமான ஆளுமைகள் புத்தகம் குறித்து பேச இருக்கிறார்கள்.  ஆகையால்நமது அனைத்து உறுப்பினர்களும் அன்றைய நிகழ்வில் கலந்துகொண்டால் மகிழ்வேன்.

 


இந்தப் புத்தகம்  வரி ஆலோசகர்களுக்கு மட்டுமில்லாமல், வணிகர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக எழுதப்பட்டுள்ளதுஆகையால் உங்கள் தொழில்முறை நண்பர்களுக்கும், சட்டம் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் வணிகர்களுக்கும் பரிந்துரையுங்கள்.

 

புத்தகத்தின் விலை ரூ. 600.  அறிமுகப்படுத்தும் நிகழ்வில் உறுப்பினர்களுக்காக  சலுகை விலையாக ரூ. 500 என தர முடிவு செய்யப்பட்டுள்ளது.  தபால் வழியாக பெறவேண்டும் என விரும்புகிறவர்கள் கூடுதலாக ரூ. 100 செலுத்தவேண்டும்.

 

நன்றி.

 

சு. செந்தமிழ்ச்செல்வன்,

தொழிலாற்றுநர்

தலைவர், GSTPS

98412 26856

07/01/2025

 

குறிப்பு : என்னுடைய எண் வழியாக GPay செலுத்தலாம்.   QR codeயும் பகிர்ந்துள்ளேன். அதன் வழியாகவும் செலுத்தலாம். இந்த நிகழ்ச்சியில் வாங்குகிறவர்களுக்கு மட்டும் ரூ. 500 க்கு வழங்குகிறோம். தபால் வழியில் வாங்கவேண்டும் என நினைக்கிறவர்கள் ரூ. 100 கூடுதலாக அனுப்புங்கள்.   பணம் செலுத்திய பிறகு மறக்காமல் மேலே உள்ள எண்ணுக்கு பணம் செலுத்திய ஸ்கீரின் ஷாட்டையும், உங்களுடைய முகவரியையும் பகிருங்கள்.