Thursday, July 31, 2025

GSTPS : Happy news - 17,000 people have visited



அனைவருக்கும் வணக்கம். நமது தளத்தை துவங்கி, வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை கடந்துவிட்டோம்.  இதுவரை 17000 பேர் வருகை தந்திருக்கிறார்கள். தளத்திற்கு சராசரியாக தினமும் 22 பேர் வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான விசயம். 


நமது கூட்டங்கள் குறித்த அறிவிப்புகள், நமது கூட்டங்களில் பேச்சாளர்கள் பயன்படுத்தும் பிபிடிகள், நமது கூட்டங்களின் அனுபவ பகிர்வு, தலைவர் திரு செந்தமிழ்ச்செல்வன் எழுதும் தொடர் ஜி.எஸ்.டி கட்டுரைகள், பி.எப் கட்டுரைகள் என தொடர்ந்து பகிர்ந்துவருகிறோம்.


தலைப்பு வாரியாக பதிவதால், தேடுவதும் எளிது. தமிழ் வாசிக்க சிரமம் என்றால், மொழியை மாற்றுவதற்கும் தளத்தில் வசதி இருக்கிறது.


நமது தளம் ஒரு ஆவணக் காப்பகம். நம் தளத்திற்கு வந்தால் தீர்வு கிடைக்கும் என நம்பி வந்து,  கிடைத்தும் விட்டால், அது தான் உண்மையான வெற்றி.


ஆகையால், பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேவையானவர்களுக்கும் தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.


நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety



GSTPS : ITR2 & ITR 3 Returns updates and Filing Demo - A. Senbagam, Secretary GSTPS

 


நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (02/08/2025) அன்று காலை 10.30 மணியளவில் இணைய வழிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு : "ITR2 & ITR 3 Returns updates and Filing Demo"


பேச்சாளர் :   திரு. A. செண்பகம் , 
                           செயலர், GSTPS
                                                      


Meeting ID  :  6625536356

Password    :   02082025



கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Saturday, July 12, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) : நிறுவனங்களுக்காக இயங்கும் பி.எப். தளம்

 


சில மாதங்களுக்கு முன்பு, பணியாளர்களுக்கென இயங்கும் பி.எப். தளம் குறித்த அடிப்படைத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன். கடந்த மாதம் நிறுவனங்களுக்கென இயங்கும் பி.எப். தளம் குறித்து எழுதச்சொல்லி வாசகர்களில் இருவர் தொலைபேசியில் கோரினார்கள்.

 

அதனால் பி.எப். தளம் குறித்து இப்பொழுது பார்க்கலாம். அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஒன்று விடாமல் எழுதினால், மூன்று, நான்கு மாதங்களுக்கு நீண்டுவிடும். ஆகையால், நிறுவனங்கள் அடிக்கடி பயன்படுத்துகிற அம்சங்களை மட்டும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

 

நிறுவனங்களுக்கென  இயங்கும் பி.எப். தளம்

 

நிறுவனங்களுக்காக பி.எப் இயக்க கூடிய தளத்தின் முகவரி இது. https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/.  நிறுவனத்தை பதிவு செய்த பிறகு, தரப்படும் நிறுவனத்திற்கான அடையாள எண்ணையே இதற்கு User ID யாக ஏற்படுத்தி தருகிறார்கள்.  உதாரணத்திற்கு, அந்த எண் இப்படி இருக்கும். TN/AMB /XXXXXXXXXX.  துவக்கத்தில் உள்ள இரண்டு எழுத்துக்கள் மாநிலத்தை குறிக்கும்.  அடுத்து வருவது நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கையாள்கிற பிஎப். கிளையின் அடையாளம். AMB என்றால் அம்பத்தூர்.  TAM என்றால் தாம்பரம். அடுத்து வரும் பத்து டிஜிட் எண்.  பதிவு செய்யும் பொழுது கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை கொண்டு உள்ளே நுழையவேண்டும்.    நிறுவனம் தொடர்பான, பணியாளர் தொடர்பான பல அம்சங்களை செயல்படுத்துவதற்கு இந்த தளம் உதவுகிறது.

 

நுழைவு (Home)

 


தளத்தில் உள்ளே நுழைந்ததுமே, Home பகுதியில் நிறுவனத்திற்கு உடனடியாக தெரியும்படியான சில அறிவிப்புகளை கண்ணில்படும்படி  தருகிறார்கள். இப்பொழுது ஒரு புதிய பணியாளரை இணைப்பதற்கு நிறுவன பொறுப்பாளரின் டிஜிட்டல் சாவியை பதியவேண்டும் என்பது முன்நிபந்தனையாக மாற்றியிருக்கிறோம் என்ற அறிவிப்பை இப்பொழுது தெரிவித்திருக்கிறார்கள்.  வலது பக்கம் நிறுவனம் குறித்த விவரங்கள் (Profile) இருக்கின்றன.

 

பணியாளர்கள் குறித்த பதிவு (Member)

 

இந்த பகுதியில் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பணியாளரின் UAN எண்ணை பதிவிட்டு தேடினால், அவருடைய விவரங்களை பார்க்கமுடியும் (Member Profile),  புதிய பணியாளரை ஆதாரின் அடிப்படையில், அடிப்படை தகவல்களைப் பதிவு செய்வது (Register - individual), விலக்குவது (Exit), KYC (Know your customer)  பணியாளர் தொடர்பான விவரங்களான ஆதார், வங்கி கணக்கு, பான் கணக்கு போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்வது, பணியாளர் தரும் விவரங்களை கவனமாக சரிப்பார்த்து, DSC கொண்டு ஒப்புதல் தருவது (Approve KYC Pending for DS), பணியாளர்கள் தங்களுடைய அடிப்படை விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யும் பொழுது அதற்காக நிறுவனம் இணை உறுதிமொழி ஒப்பந்தத்தை (Joint Declaration) அதற்குரிய ஆவணங்களுடன் பதிவு செய்வது, பணியாளர்கள் அவர்களுக்கென கொடுக்கப்பட்ட தளத்தில் தங்களுடைய விண்ணப்பிக்கும் பொழுது, அது நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்து நிற்கும். அதற்கு ஒப்புதல் தருவது (Basic Details change Requests, Approve KYC seeded by Member) என பல அம்சங்கள் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளன.

 

ஒரு பணியாளரை பதிவு செய்ய ஆதாரை வைத்து பதிவு செய்கிறோம்.  அந்த பணியாளர் இதற்கு முன்பு பி.எப்.பில் சந்தாதாராக இருக்கும் பட்சத்தில் அவர் முந்தைய நிறுவனத்தில் வேலை செய்த UAN தெரியவில்லை என்றால் கூட, ஆதாரை அடிப்படையாக வைத்து, அவருக்கான அடையாள எண்ணை பி.எப். தளமே தெரிவித்துவிடுகிறது.  அதனால் பழைய எண் தெரியவில்லையே என பழைய நிறுவனத்தை தொடர்புகொள்ள தேவையில்லை.

 

நிறுவனம் குறித்த பதிவு (Establishment)

 

நிறுவனம் தொடர்பாக தகவல்கள், மின்னஞ்சல், தொடர்பு எண் மாற்றவேண்டுமென்றால், நிறுவனத்தின் பொறுப்பாளருடைய DSCயை பதிவு செய்வது, ஆதாரை கொண்டு பதிவது (E Sign), நிறுவனத்தின் அடிப்படைத் தகவல்களைப் பார்ப்பது (Form 5A),  நிறுவனத்தின் தகவல்கள் மாறும் பொழுது விண்ணப்பிப்பது,  நிறுவனத்தின் தணிக்கை குறித்த தகவல்கள் (E Inspection),  ஒப்பந்ததாரர் (Sub Contractor) குறித்த தகவல்கள் என பல அம்சங்கள் இதில் இடம் பெற்ற்றுள்ளன.

 

பங்களிப்பைச் செலுத்துவது (Payments)

 


ஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் வேலை செய்த நாட்கள் எவ்வளவு என்பதை கணக்கிட்டு, அவர்கள் கேட்கிற (Notepad) வடிவத்தில் மாற்றி,  அதை தளத்தில் அப்லோட் செய்வது, அதனடிப்படையில் நாம் செலுத்தவேண்டியது எவ்வளவு? அதை வங்கி (Net banking) மூலம் செலுத்துவது, அதற்கான ரசீதுகளை பெறுவது, தாமதமாக பணம் செலுத்தும் பொழுது, அதற்கான வட்டி, எவ்வளவு? தாமதக்கட்டணம் எவ்வளவு? என்பதையும், ஒருவேளை நிறுவனம் இயங்காமல் இருக்கும் பொழுது, குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ. 75 செலுத்துவது எல்லாம் இந்த பகுதியில் இடம்பெறுகின்றன.

 

பணியாளர் சம்பந்தமான விவரங்கள் (Dashboards)

 

பணியாளர் சம்பந்தமான விவரங்களை துவக்கத்தில் பதியும் பொழுது, சில அம்சங்கள் விடுபட்டு போயிருந்தால்  (Missing Details) அதை நிரப்புவது, இப்பொழுது எத்தனை பணியாளர்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள், அவர்களின் அடிப்படைத் தகவல்களை காண்கின்ற விவரம் (Active Member),  குறிப்பிட்ட பணியாளரின் UAN யை கொண்டு பணி செய்த காலத்தை அறிந்துகொள்வது (Member Service details) இன்னும் சில அம்சங்கள் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளன.

 

நிறுவனம் குறித்த விவரங்கள் (User)

 

நிறுவனம் குறித்த  (User) அடிப்படை விவரங்களான மின்னஞ்சல், மொபைல் எண் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.  அடுத்து உள்ளே நுழைவதற்கான கடவுச்சொல்லை (Password) மாற்றுவதற்கான வசதி உள்ளது.

 

நிர்வாகம் (Admin)

 


சில நிறுவனங்களில் பணியாளர் குறித்த விவரங்களை கையாளுதலை ஒருவரும், பணம் செலுத்துவதற்கு ஒருவரும் என நிர்வாக முறையில் சில பிரிவுகளை ஏற்படுத்தியிருப்பார்கள். ஆகையால் ஒரு கடவுச்சொல் என்பது போதாது. நிறுவனத்தின் நடைமுறையில் கூடுதலாக கடவுச் சொற்கள் தேவைப்படுகிறது என்றால், பி.எப் அலுவலகத்தைத் தொடர்புகொண்டால், அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவார்கள் என்ற செய்தியை காண்பிக்கிறது.

 

இணையவழி சேவைகள் (Online Services)

 

சமீப காலங்களில் ஒரு பணியாளர் முந்தைய நிறுவனத்தில் இருந்து விலகி, புதிய நிறுவனத்தில் இணையும் பொழுது, முன்பெல்லாம் சம்பந்தப்பட்ட பணியாளர் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.  ஆனால் சமீப காலமாக முந்தைய கணக்கிற்கும், புதிய கணக்கிற்கும் பணியாளர் சம்பந்தமான அடிப்படையான தகவல்கள் ஏதும் மாறுபாடு இல்லாவிட்டால், தானாகவே புதிய கணக்கிற்கு மாறிவிடும் என்பது நடைமுறையாக இருக்கிறது. இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை நிறுத்துவதற்கு ஒரு வசதியை (Stop Auto Transfer Request) ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

தானாக மாறிவிடும் ஏற்பாடு இருந்தாலும், சில சமயங்களில் ஏதேனும் தகவல்கள் மாறுபாடு இருந்தால், மாறாது முந்தைய கணக்கு பணம் அப்படியே நின்றுவிடும். அப்படி இருக்கும் பட்சத்தில் மாற்ற கோருவதற்கான விண்ணப்பம் ஒன்றை ஏற்பாடு (Transfer Claims) செய்திருக்கிறார்கள்.

 

பி.எப். தளம் நத்தை வேகத்தில் இயங்குவது ஏன்?

 

பிஎப். தளம் கொடுக்கிற கணக்குபடி, எட்டு இலட்சம் நிறுவனங்கள், எட்டு கோடி பணியாளர்கள், ஒரு கோடி ஓய்வுநிதி பெறுகிறவர்கள் பி.எப் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.  முன்பெல்லாம் பணியாளர்களுடைய பிஎப் நிதி, ஓய்வுநிதி விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக்கொண்டிருந்தவர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்திற்கு விரைவாக மாற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த சூழ்நிலையில் முந்தைய பத்தாண்டை விட,   நிறுவனங்களுக்கென இயங்கும் தளத்திலும், பணியாளர்களுக்கென இயங்கும் தளத்திலும்   தினந்தோறும் இலட்சக்கணக்கில் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த சூழ்நிலையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய இரண்டு தளங்களுமே நத்தை வேகத்தில் இயங்குவது பெரிய சோகம்.  பல சமயங்களில் குறிப்பாக காலை பத்து முதல் ஐந்து மணி வரைக்குமான அலுவல் நேரத்தில்  தளங்கள் ஸ்தம்பித்து எந்த வேலையையும் செய்யவிடாமல் செய்துவிடுகிறது.  இதனால் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு முடிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். பல சமயங்களில் மாதம் தோறும் செலுத்தவேண்டிய பங்களிப்பை உரிய தேதிக்குள் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். மெல்ல இயங்குவது குறித்த கவனம் இல்லாமல், ஒரு நாள் தாமதமானாலும், வட்டியையும், அபராதத்தையும் கணக்கிட்டு அடுத்த மாதமே தளத்தில் தெரிவித்துவிடுகிறார்கள்.   சந்தாதாரர்களான பணியாளர்களும் மிகவும் அலைச்சலுக்குள்ளாகிறார்கள். 

 

தளம் மெதுவாக இயங்குவதால், பி.எப்.  பணியாளர்களின் நேரமும் வீணாகுகிறது. இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் இலக்குகளை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றமுடியாமலும், கொடுக்கப்படும் தொடர் அழுத்தத்தினாலும் சிலர் மருத்துவ விடுப்பில் செல்கிறார்கள்.   சிலர் விருப்ப ஓய்வில் வேலையை விட்டே செல்கின்றனர்.

 

மெல்ல இயங்குவதற்கான காரணம் என்னவென்று தேடியபொழுது…. 2010க்கு முன்பு வரை ‘பாக்ஸ் ப்ரோ’ மென்பொருள் (சாப்ட்வேர்) பயன்படுத்தபட்டு வந்தது. 2011 முதல், ‘ஆரக்கிள் மற்றும் டெவலப்பரால்’ தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

அப்போதே, ‘எச்.பி.- திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’ எனும் வன்பொருளும், அதனுடன் சேர்ந்த ‘எச்.பி.’ சர்வரும் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் பரிமாற்றத்திற்காக, அன்றைய தேதியில் புதிதாக சந்தைக்கு வந்த, 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்-5 நெட்வொர்க்’ வடங்களும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

 

தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரைப்படி வன்பொருளை (ஹார்ட்வேர்) பொருத்தவரை ‘எச்.பி., நிறுவனத்தின் திங்க் கிளைண்ட்’ வன்பொருளும், சர்வரை பொருத்தவரை ‘ஐபிஎம்’ நிறுவன சர்வரும், செயல்பாட்டில் சிறப்பாக இருக்கும் எனக்கூறப்பட்ட நிலையில் ஐபிஎம் சர்வருக்கு பதில், எச்பி சர்வர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதற்கு அப்போதே ஆட்சேபனை எழுந்தது. எனினும், எச்பி சர்வர் செயல்பாட்டில் ஓரளவு சிறப்பாக இருந்த நிலையில், 2016ல் அந்த வன்பொருளின் பயன்பாட்டுகாலம் (வாரண்டி) முடிவுற்றதாக, ‘எச்.பி’ நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

 


உலகளவில் வன்பொருள் ஒன்றின் வாரண்டி காலம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டால், அதற்கடுத்த நிலையில் உள்ள நவீன வன்பொருளை பயன்படுத்த வேண்டுமென்பதே விதியாக உள்ள நிலையில், 8 ஆண்டுகளாகியும் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டு காலாவதியான பழைய வன்பொருள்களாலேயே, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் செயல்படுகின்றன. இன்றைய தேதியில் நாடு முழுவதும், 20 சதவீதம் வைப்பு நிதி அலுவலகங்கள் காலவதியான ‘எச்.பி. – திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’ வன்பொருள்களாலேயே இயங்குகின்றன.

 

தொழில்நுட்ப வளர்ச்சியால் வன்பொருளை பொருத்தவரை, ‘எச்.பி.- திங்க் கிளைண்ட் டி-740’ வரையும், தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் நெட்வொர்க் வடங்கள், 1000 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்- 8 மற்றும் 9’ வடங்கள் வரையும், இன்றைய சந்தைக்கு வந்துள்ளன.  இவ்வாறு வந்துள்ள வன் மற்றும் மென் பொருள்களை பயன்படுத்தி, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படாததால் தான் தளமும் மிக மிக மெதுவாக இயங்குகிறது. ஆகையால், இதற்கு பொறுப்பான பி.எப். நிர்வாகமும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வேகமாய் செயல்பட வைக்க வேண்டுமாய், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்வோம்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

9551291721

 

 

 

Thursday, July 10, 2025

GSTPS : "Income Tax Updates" - CMA M.Anandakumar B.Com., (CA) FCMA, Cost & Managemenrt Accountant, Theni


நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (12/07/2025) அன்று காலை 10.30 மணியளவில் இணைய வழிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு : "Incometax Updates"


பேச்சாளர் :   திரு. CMA M. ஆனந்தகுமார் B.Com., (CA) FCMA, 
                           Cost & Management, Accountant, Theni
                                                      


Meeting ID  :  6625536356

Password    :   12072025



கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Thursday, July 3, 2025

GSTPS : "ITR 1 & 4 Filing with updates/FY 2024-25/Demo" - A.Senbagam, Joint Secretary, GSTPS

 


நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும், உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (05/07/2025) அன்று காலை 10.30 மணியளவில் இணைய வழிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு : "ITR 1 & 4 Filing with updates/FY 2024-25/Demo"


பேச்சாளர் :   திரு. A. செண்பகம், 
                           இணைச்செயலர்,
                           GSTPS


Meeting ID  :  6625536356

Password    :   05072025



கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Tuesday, July 1, 2025

”ஜி.எஸ்.டி (GST) குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்” – வெற்றிகரமாக 3வது பதிப்பை நோக்கி!


புத்தகத்தின் காலடித்தடங்கள்

 

எங்களது GSTPS சொசைட்டியின் தலைவர், புத்தகத்தின் ஆசிரியருமான செந்தமிழ்ச்செல்வன் அவர்கள், பல்வேறு வணிக இதழ்களில் கடந்த சில வருடங்களாக எழுதிவந்தார்.  அவற்றை  53  தலைப்புகளில்  தொகுத்து, கடந்த நவம்பர் வரைக்குமான அப்டேட்டுகளை தொகுத்தி, 575 பக்கங்கள் கொண்ட புத்தகம் 600 ரூபாய்க்கு, 500 புத்தகங்கள் முதல் பதிப்பாக கொண்டுவந்தார்கள்.

 

மணிமேகலை பிரசுரத்தார் 05/01/2025 அன்று சென்னையில் நடைபெற்ற புத்தக திருவிழாவின் மேடையில்முக்கிய ஆளுமைகள் மூலம் புத்தகம் வெளியிட்டார்கள்.  திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் நண்பர்களும்,  வரி ஆலோசகர்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

 


தலைவர் அவர்களை கெளரவப்படுத்த சென்னையில் எங்களது GSTPS  சொசைட்டி சார்பில் புத்தகம் குறித்த அறிமுக விழாவை  11/01/2025 ஏற்பாடு செய்தோம். எங்களது உறுப்பினர்களும், வரி ஆலோசகர்களும், நண்பர்களும்  கலந்துகொள்ள அரங்கு நிறைந்தது.

 

புத்தகங்கள் குறித்த தகவல் தொடர்ந்து பல்வேறு வரி ஆலோசகர்கள் மூலம்  வரி ஆலோசகர்களுக்கு செல்ல செல்ல.. அநேகமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் புத்தகங்களை கேட்டு, பணம் அனுப்பினார்கள். அவர்களுக்கெல்லாம் இரண்டு, மூன்று வேலைநாட்களில் அனுப்பி வைத்தோம்.

 

வணிகர்களுக்கும் எளிதாக புரியும் விதத்தில் கேள்வி பதில்கள் வடிவத்தில் இருந்ததால் கேள்விப்பட்டு வணிகர்களும் வாங்க துவங்கினார்கள்.

 


எங்களது உறுப்பினர்களும், பல்வேறு வரி ஆலோசகர்கள் சார்ந்த அமைப்புகளும், தலைவரின் நண்பர்களும் புத்தகங்களை தங்களது உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிந்துரைத்தார்கள்.   வாங்கியும் விநியோகித்தார்கள்.

 

மதுரையில் வரி ஆலோசகராகவும், GST Knowledge என்ற குழுவை இயக்கி வருபவரான திரு. பூரண செந்தில்குமார் அவர்கள் மொத்தமாய் வாங்கி தன் அலுவலகத்தில் வைத்துக்கொண்டு, நேரடியாக வருபவர்களுக்கும், தான் நடத்தும் கருத்தரங்களிலும் விற்பனை செய்தார். தபால் வழியாக கேட்டவர்களுக்கும் தன்னுடைய உதவியாளரை வைத்து அனுப்பிவைத்தார். இந்த புத்தகத்தை சில நூறு புத்தகங்களை விற்பனை செய்ததில் பெரும் உதவி செய்தார்.  அவருக்கு நன்றி.

 

வரி ஆலோசகர் திரு. நீலகண்டன் அவர்களும் புத்தகம் விற்பதற்கு உதவிகள் செய்தார். அவருக்கும் நன்றி.

 

இப்படி பலருடைய ஒத்துழைப்பில், புத்தகம் வெளியிட்ட ஒரு மாதத்திலேயே பதிப்பகம் வெளியிட்ட 500 புத்தகங்களில் 300 புத்தகங்களை SS சார் பெற்றதில், அனைத்து புத்தகங்களும் தீர்ந்தன.  பதிப்பகம் சென்னை புத்தக திருவிழாவிலும், தபால் வழியாகவும் அவர்களும் 200 புத்தகங்களை விற்றிருந்தார்கள்.

 

இரண்டாவது பதிப்பும் வெளிவந்தது!!

 


மணிமேகலை பிரசுரத்தின் பதிப்பாசிரியரான இரவி தமிழ்வாணன் அவர்களை SS சாரைச் சந்தித்த பொழுது,  ” விலை ரூ. 600 என இருந்தும் குறுகிய காலத்திற்குள் முதல் பதிப்பை நீங்களே பெரும்பாலும் விற்பனை செய்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.   இந்துஸ்தான் சேம்பரில் கூட்டம் நடத்திய பொழுது, அரங்கு நிறைந்த கூட்டம். அத்தனை பேரும் உங்கள் மீது மதிப்புக்கொண்டு வந்திருந்தார்கள் என்பது முக்கியமான விசயம்.  நான் வியந்துபோய்விட்டேன்” என்றார்.

 

புத்தகம் குறித்து தொழில் உலகம், தினகரன், தினத்தந்தி, தினமணி, தினமலர் போன்ற மாத, தினசரி இதழ்களில் மதிப்புரைகள் அடுத்தடுத்து வெளிவந்தன. TN Headlines சானல் SS சாரிடம் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டது.


https://www.youtube.com/watch?v=kkJzZCsdXNY&t=426s



 

GSTPS சொசைட்டியை போன்று பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் அமைப்புகளின் நிர்வாகிகள் புத்தகங்களை குறித்து தங்கள் உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்கள்.

 

புத்தகங்களைப் படித்துவிட்டு, அவ்வப்பொழுது கருத்துகளையும் நேரில் மகிழ்வோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.  சிலர் தொலைபேசி செய்து சில சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெறுகிறார்கள். ஆசிரியரை நேரில் வீட்டில் சந்தித்து பேசி, வாங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

 

புத்தகம் குறித்து மூன்று பேர் இரண்டு நிமிடங்கள், மூன்று நிமிடங்கள் காணொளிகளை GSTPS உறுப்பினர்கள் அனுப்பிவைத்தார்கள்.  GSTPS யூடியூப் தளத்தில் வெளியிட்டோம்.

 


ஜி.எஸ்.டியில் ஒரு சிறப்பு பிரிவு இருக்கிறது. புதிய புதிய வழிகளில் எப்படி ஜி.எஸ்.டி வரி வருவாயை அதிகப்படுத்துவது என்ற சிந்திக்கிற பிரிவு. அதன் அதிகாரிகளில் ஒருவர் தொடர்புகொண்டு, ஒரு மணி நேரம் புத்தகம் குறித்து பாராட்டியும், புத்தகம் குறித்தும் பேசியுள்ளார். ”எங்கள் கமிசனரை  சந்தியுங்கள். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்” என சொல்லியிருக்கிறார்.

 

இந்த புத்தகத்தை தணிக்கையாளர்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள், வணிகர்கள் என பல தரப்பிலும் சென்று சேர்ந்துள்ளது. இருப்பினும் 800 புத்தகங்கள் என்பது மிக குறைவு. மாவட்டத்திற்கு 500 வரி ஆலோசகர்கள் உள்ள தமிழ்நாட்டில், பல ஆயிரம் விற்க வேண்டிய புத்தகம் இது. அவர்களுக்கு இந்த தகவல் சென்று சேருவதில் உள்ள பிரச்சனையால் குறைவாக போய்க்கொண்டிருக்கிறது.

 

அனைவருக்கும் நன்றி.

 

-    - GSTPS

 

புத்தகம் தேவைப்படுகிறவர்கள். கீழே உள்ள தொலைபேசி எண்ணுக்கு GPay செய்யுங்கள். புத்தகத்தின் விலை ரூ. 600. சென்னைக்குள் இருப்பவர்கள் தபால் வழியாக பெற விரும்புகிறவர்கள் கூடுதலாக ரூ. 50 அனுப்புங்கள். சென்னையைத் தாண்டி வெளியூர்களில், வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் ரூ. 100 அனுப்புங்கள். பணம் அனுப்பிய ஸ்கீரின் ஷாட்டையும், தங்கள் முகவரியையும் கீழ்க்கண்ட எண்ணுக்கு அனுப்புங்கள்.

 

நன்றி.

 

சு. செந்தமிழ்ச்செல்வன்,

தொழிலாற்றுநர்,

9841226856