Sunday, March 16, 2025

GSTPS : Start up & Its Benefits - Mr. Venkataramanan CA, PPT


”ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அதன் பலன்களும்”
  என்ற  தலைப்பில் தணிக்கையாளர் வெங்கடரமணன் அவர்கள் பேசிய ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.   GSTPS உறுப்பினர்களோடு, பிற மாவட்டங்களில் இருந்தும் கலந்துகொண்டார்கள்.


ஸ்டார்ப் அப் நிறுவனம் என்பது வழக்கமான தொழில் என்பது இல்லை.   தொழில்நுட்பத்துடன் இணைந்து புதுமைகளை உருவாக்குவது


உதாரணமாக, ஸ்விக்கியை எடுத்துக்கொள்ளலாம். உணவு டெலிவரி என்று மட்டும் இல்லை.   உணவகங்களை இணைத்து, உணவுகளை பட்டியலிட்டு, ஆப் (App) மூலம் இணைத்து,  எவ்வளவு கட்டணம் என்பதை முறைப்படுத்தி, நுகர்வோர்களுக்கு யார் கொண்டு போய் சேர்ப்பது என்பது வரை அமுல்படுத்தியது. இதைத் துவங்கும் பொழுது ஸ்டார்ட் அப்  எனலாம்.


முன்பெல்லாம் ஒரு புதிய தொழிலை வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துடன் முன்னெடுப்பவர்கள்  முதலீட்டை ஈர்ப்பது, தொழிலை நடத்துவது என்பது சவாலாக இருந்தது.


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முட்டி மோதி, முதலீட்டை பெற்று பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால், மத்திய, மாநில அரசுகள் இதற்கான பலனை கண்டதும் இதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கியிருக்கிறார்கள்.  முதலீட்டாளர்களை இணைப்பதில் கவனம் செலுத்துகின்றன. வருமான வரியில் மூன்று ஆண்டுகள் சலுகைகளை வழங்குகின்றன.  தொழில் துவங்கி பத்து ஆண்டுகள் ஸ்டார்ட் அப் அல்லது 100 கோடி வரைக்கும் என ஒரு தொழில் வளரும் காலம் வரைக்கும், கை கொடுத்து தூக்கிவிடுகின்றன. 


இந்தியாவில் 2016ல் 450 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், 2023ல் ஒரு லட்சத்தை தாண்டுகின்றன.    இப்போதைக்கு பெங்களூர், மும்பை, தில்லி முதன்மை இடத்தில் இருக்கின்றன.


தமிழக அரசு தொழிலில் முதன்மை மாநிலங்களில் ஒன்று என்பதால்… 2020ல் இதற்காக உதவும் திட்டத்தை துவங்கி, 2000 நிறுவனங்கள் என துவங்கி 2024ல் 9000 நிறுவனங்களை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. 2028ல் 15000 என இலக்கு என்பதை நோக்கி நகர்கிறது. இதில் சென்னை 53% என்றால், பிற மாவட்டங்கள் 47% என்பதும் கவனிக்கத்தக்கது.


ஆக வளர்ந்து வரும் ஸ்டார்ப் நிறுவனம் என்பதற்கு விளக்கம் என்ன? எப்படி துவங்குவது? அதற்குரிய நிபந்தனைகள் என்ன? மத்திய, மாநில அரசுகள் தருகின்றன சலுகைகள் என்ன?என்பதை நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தெளிவாக விளக்கினார். விளக்கமாக பார்க்க அவருடைய பிபிடி-யை கீழேப் பார்க்கவும்.


ஆக, ஒரு வரி ஆலோசகராக இருக்கும் நாம், தொழில் துவங்க நம்மைத் தான் துவக்கத்தில் அணுகுவார்கள்.   அது ஸ்டார்ப் அப் வகையில் வரும் என கணித்தால், துவக்கத்திலேயே அதற்குரிய வேலைகளையும் செய்தால், தொழில் முனைவோர் நல்ல பலனடைவார்கள். அதன் மூலம் நமக்கும் நல்ல பலன் கிடைக்கும்.


இந்த தலைப்பை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி. தணிக்கையாளர் வெங்கடரமணன் அவர்களுக்கும் நன்றி.


- GSTPS




























தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856


No comments:

Post a Comment