Wednesday, June 10, 2026

PF பாக்கி வைத்திருக்கிறீர்களா? இனிமேல் உங்கள் கதவைத் தட்டுவது நோட்டீஸ் மட்டும் இருக்காது!


29.05.2026 அன்று வெளியான ஒரு அரசு அறிவிப்பு, பல நிறுவனங்களின் கவனத்திற்கு வராமல் போயிருக்கலாம். ஆனால் PF தொடர்பாக செயல்படுபவர்களுக்கு இது முக்கியமான செய்தி.

 

என்ன மாற்றம்?

 

இதுவரை PF பாக்கி வசூல் செய்வதற்கான அதிகாரம் இருந்த அதிகாரிகளை, புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (Code on Social Security, 2020) முறையாக Recovery Officer ஆக அரசு அறிவித்திருக்கிறது.

 

எளிமையாகச் சொன்னால்...



 

கடன் கொடுத்தவர் வீட்டின் வாசலில் நின்று கேட்பதற்கும், நீதிமன்ற உத்தரவுடன் வசூலிக்க வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறதே... அப்படிப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ வலிமையை இந்த அறிவிப்பு வழங்குகிறது.


யாரெல்லாம் Recovery Officer?

 

  • Central Provident Fund Commissioner
  • Additional Central Provident Fund Commissioner
  • Regional Provident Fund Commissioner
  • Assistant Provident Fund Commissioner
  • Enforcement Officer

 

இவர்கள் அனைவரும் இனிமேல் Recovery Officer அதிகாரத்துடன் செயல்பட முடியும்.

 

அதிகார வரம்பு என்ன?

 

ஒரு மாநிலம், ஒரு மண்டலம் என்ற கட்டுப்பாடு இல்லை. முழு இந்தியா அளவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

இதனால் நிறுவனங்களுக்கு என்ன தாக்கம்?

 

PF தொகை நிலுவையில் இருந்தால், "பிறகு பார்த்துக் கொள்ளலாம்..." "அடுத்த மாதம் கட்டிவிடலாம்..." என்ற எண்ணம் ஆபத்தாக மாறலாம்.

 

ஏனெனில் Recovery Proceedings தொடங்கப்பட்டால்,

  • வங்கிக் கணக்கு முடக்கம்
  • சொத்து இணைப்பு நடவடிக்கை
  • நில வருவாய் பாக்கி போல வசூல் நடவடிக்கை

போன்ற சட்ட நடவடிக்கைகள் வேகமாக முன்னேறலாம்.

 

ஒரு முக்கியமான உண்மை

 

ஏற்கனவே உள்ள சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகளின் கையில் இருக்கும் ஆயுதத்தை மேலும் தெளிவாகவும், வலுவாகவும் மாற்றும் அறிவிப்பு இது.

 

வரி ஆலோசகர்களும் நிறுவனங்களும் கவனிக்க வேண்டியது

 

PF பாக்கி இருப்பின் உடனடியாக சரிபார்க்க வேண்டும். கோரிக்கைகள், நோட்டீஸ்கள், விசாரணைகள் நிலுவையில் இருந்தால் அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. "பணம் கட்டவில்லை என்றால் என்ன ஆகும்?" என்ற கேள்விக்கு, இனி EPFO மிகவும் தெளிவான பதிலை அளிக்கக்கூடிய நிலையில் உள்ளது.

 

"பாக்கி இருந்தால் வசூல் செய்வோம்; அதற்கான அதிகாரமும் எங்களிடம் இருக்கிறது" என்பதே அந்த பதில்.

 

இறுதியாக...

 

பல நேரங்களில் சட்டங்கள் மாறுவது பெரிய செய்தியாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் அதிகாரங்கள் தெளிவுபடுத்தப்படுவதுதான் பெரிய செய்தியாக இருக்கும். 29.05.2026 அறிவிப்பு அப்படிப்பட்ட ஒன்றாகும்.

 

PF இணக்கத்தை (Compliance) காலம்தோறும் சரிபார்த்து வைத்திருப்பது, இப்போது ஒரு நல்ல நடைமுறை மட்டுமல்ல; தேவையான பாதுகாப்பு நடவடிக்கையாகவும் மாறியுள்ளது.

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

 

No comments:

Post a Comment