2018 - அக்டோபரில்
ஒரு தனிநபர் GST பதிவு பெற்றார். அவர் எதிர்பார்த்த தொழிலும், அதற்குரிய நிதியும் கிடைக்கவில்லை. விழிப்புணர்வு இல்லாததால், அப்படியே விட்டுவிட்டார்.
ஆறு மாதங்கள் காத்திருந்து சம்பந்தப்பட்ட அதிகாரியே, பதிவை (Suspend) ரத்து செய்துவிட்டார்.
சமீபத்தில்
இப்பொழுது இறுதி ரிட்டன் GSTR10 பதிவு செய்யாததற்கான ஒரு அபராதம் போட்டு ஆர்டர் அனுப்பிவிட்டார்கள். சம்பந்தப்பட்டவர் அபராதத்தை செலுத்திவிட்டார்.
இறுதி ரிட்டனை
பதிவு செய்யலாம் என்றால், ஜனவரி 2019 மாத
GSTR1 (GSTR3B தாக்கல் செய்துவிட்டார்கள்) ரிட்டனை தாக்கல் செய்தால் தான், GSTR10 ரிட்டன்
திறக்கும் என்கிறது. ஜனவரி மாத ரிட்டர்னை தாக்கல்
செய்வதற்காக போனால், நீங்கள் மூன்று ஆண்டுகளை கடந்துவிட்டீர்கள். ஆகையால் அதை பதிவு
செய்ய இயலாது என தளம் சொல்கிறது.
சம்பந்தப்பட்ட
சர்க்கிள் அதிகாரியை சந்தித்து விளக்கம் கேட்டால்,
அதை ”நாங்கள் திறக்க வாய்ப்பில்லை. தளத்திடம் உதவி கேளுங்கள்” என சொல்லிவிட்டார். GST தளத்தில் உதவிக்கேட்டு இந்த பிரச்சனையை விளக்கினால்,
(”No Comments”) ”சொல்வதற்கு ஒன்றும் இல்லை” என பதில் அளித்தது. (தளத்திலேயே தீர்க்க வாய்ப்பு இருந்தும்,
இப்படி அலட்சியமான பதில் சொல்கிறது என தெரிய வருகிறது)
குழுவில்
உதவி கேட்ட பொழுது, திரு. பாலாஜி அருணாச்சலம் அவர்கள் *"Application for
Unbarring Returns”* குறித்து தெரிவித்தார்.
அதற்காக விண்ணப்பித்தால், அதிகாரி உரிய நேரத்திற்குள் அப்ரூவல் தரவில்லை. இரண்டு
முறை நேரில் போய் கேட்ட பிறகு, அதை அனுமதித்தார்.
இப்பொழுது GSTR1 பைல் செய்து, இறுதி ரிட்டனையும் வெற்றிகரமாக தாக்கல் செய்துவிட்டோம். திரு. பாலாஜி அருணாச்சலம் அவர்களுக்கு நன்றி.
GST தளத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இப்படி நிறைய வசதிகளை கொண்டுவந்துவிட்டார்கள். தளத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என நமது GSTPS தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் இது குறித்து தொடர் கட்டுரைகள் எழுதி வருவதாக ஒருமுறை பேசும் பொழுது தகவலாக தெரிவித்தார். அவர் சொன்ன படி, வரும் டிசம்பரில் புத்தகமாக கொண்டு வந்தால், வரி ஆலோசகர்கள் பலருக்கும் உண்மையிலேயே நல்ல பயனுள்ளதாக இருக்கும். ஆர்வமாய் எதிர்பார்க்கிறேன்.
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

