Sunday, May 3, 2026

Pomodoro நுட்பம் என்றால்? ஒரு வரி ஆலோசகருக்கு எப்படி பயன்படும்?

 


Pomodoro Technique (போமொடோரோ முறை) என்பது நேர மேலாண்மை (Time Management) செய்வதற்கான எளிய மற்றும் பயனுள்ள முறை ஆகும். இதை Francesco Cirillo உருவாக்கினார்.

 

இந்த முறை எப்படி வேலை செய்கிறது?

 

👉 குறுகிய நேரத்திற்கு முழு கவனம்
👉
இடையில் சிறிய ஓய்வு

 

படிப்படையான நடைமுறை

 

  1. ஒரு பணியை தேர்வு செய்ய வேண்டும்

உதாரணம்: கணக்கு ஆய்வு, ஜி.எஸ்.டி ரிட்டன் தயார்

 

  1. 25 நிமிடங்களுக்கு அலாரம் (Timer) அமைக்க வேண்டும்

இதையே ஒரு “Pomodoro” என கூறுகிறார்கள்.

 

  1. அந்த 25 நிமிடங்கள் முழு கவனத்துடன் வேலை செய்ய வேண்டும்


எந்தத் தடையும் இல்லாமல்
மொபைல், சமூக வலைத்தளங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

 

  1. 25 நிமிடம் முடிந்ததும் 5 நிமிடம் ஓய்வு

 

  1. இதை 4 முறை செய்த பிறகு


👉 15–30
நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும்

 

எளிய உதாரணம்

  • 9:00 – 9:25 → வேலை
  • 9:25 – 9:30 → ஓய்வு
  • 9:30 – 9:55 → வேலை
  • 9:55 – 10:00 → ஓய்வு

(4 cycles முடிந்த பிறகுநீண்ட ஓய்வு)

 

இந்த முறையின் நன்மைகள்

 


கவனம் (Focus) அதிகரிக்கும்
வேலையைத் தள்ளிப்போடும் பழக்கம் (Procrastination) குறையும்
மனச் சோர்வு குறையும்
வேலைகளை அளவாக பிரித்து செய்ய உதவும்

 

இந்த முறை யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?

 

  • கணக்கு / வரி ஆலோசகர்கள்
  • மாணவர்கள்
  • அலுவலகப் பணியாளர்கள்
  • ப்ரீலான்சர்கள்

 

சில நடைமுறை குறிப்புகள்

 

  • நேரப் பயன்பாட்டிற்கு மொபைல் ஆப் அல்லது எளிதான டைமர் பயன்படுத்தலாம்
  • ஒவ்வொரு Pomodoro முடிந்ததும், செய்ததை குறித்துக் கொள்ள வேண்டும்
  • வேலை இடையில் இடையூறு வந்தால்அந்த Pomodoro கணக்கில் சேர்க்ககூடாது.

 

இதில் கவனிக்க வேண்டியது

 

இந்த முறை ஒரு வழிகாட்டி மட்டும் தான்.

 

👉 வேலை தன்மைக்கு ஏற்ப 25 நிமிடத்தை 40 நிமிடமாக மாற்றிக் கொள்ளலாம்.

 

இறுதியாக...

Pomodoro முறை என்பதுநேரத்தை கட்டுப்படுத்துவதுஅல்ல;

👉 “கவனத்தை கட்டுப்படுத்துவதுஎன்பதே இதன் முக்கிய நோக்கம்.


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Saturday, May 2, 2026

Digital Marketing என்றால்? ஒரு வரி ஆலோசகருக்கு எப்படி பயன்படும்?

 


இணையம், மொபைல், சமூக ஊடகங்கள் போன்ற டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி சேவைகள் அல்லது தொழிலை மக்களிடம் கொண்டு செல்வதே Digital Marketing ஆகும். வாடிக்கையாளர்கள் பலரும் இணையத்தில் தேடுகிறார்கள்.  ஆகையால் அங்கு விளம்பரம் செய்வதே சரியானது.

 

சமகாலத்தில் ஒரு திரைப்படம் எடுத்தால் கூட டிஜிட்டலில் விளம்பரப்படுத்துவதற்கு சில கோடிகளை தாராளமாக செலவழிக்கிறார்கள். மக்கள் எங்கு இருக்கிறோர்களோ, அங்கு நம்முடைய பொருளை, சேவையை சந்தைப்படுத்துதல் அவசியமாகும்.

 

வரி ஆலோசகர் இதை எப்படி செய்யலாம்? என்ன வழிகள் இருக்கின்றன?

 

1, நமக்கான தளம் (Professional Website) :  கூகுள் போன்றவை இலவசமாகவே தருகின்றன. நமது சொசைட்டிக்கான தளம் அப்படித்தான் இயங்குகிறது.   செலவு செய்தால், நமக்கான ஒரு தனித்தளத்தை உருவாக்கலாம். அதில் நமது சேவைகளை விளம்பரப்படுத்தலாம்.  நமது தொழில் நிமித்தம் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வெளியிடலாம்

 

2. சமூக வலைத்தளங்கள் : 

 

அ) பேஸ்புக்/இன்ஸ்டாகிராம் :  நம் தொழில்  சம்பந்தமான மாற்றங்களை, செயல்பாடுகளை சின்னதாய் காணொளிகளை உருவாக்கி வெளியிடலாம்.  பேனர்களை உருவாக்கி வெளியிடலாம்.

 

ஆ)  வாட்சப் ஸ்டேட்ஸ் :  தினசரி நமது தொழில் ரீதியான சில டிப்ஸ்களை, நினைவூட்டல்களை வெளியிட்டால், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சென்றடைடயும்.

 

இ.  வாட்சப் வழியாக : வாடிக்கையாளர்களுக்கு தேவையான அப்டேட் செய்திகளை தெரிவிப்பதன் மூலம் அவர்களை பயிற்றுவிக்கலாம். தவறுகள் குறையும். நம் மீதும் நம்பிக்கை வளரும்.

 

ஈ) மின்னஞ்சல் வழியாக :   ஜி.எஸ்.டி மாற்றங்களை, வருமான வரி குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து அனுப்பலாம். இதை மின்னஞ்சல் வழியாக தானாகவே செல்லும்படியும் நாம் அனுப்பலாம்.

 

உ) யூடியூப் சானல் :    ஜி.எஸ்.டி, வருமானவரி போன்ற தலைப்புகளை தொடர்ச்சியாக சிறிய காணொளிகளை வெளியிடலாம். 

 

ஊ) கூகுள் மூலம் :   அருகில் உள்ள வரி ஆலோசகர்” என தேடும் பொழுது, நமது பெயரை வரவழைக்கலாம். அதிலும் நமது சேவையை பெற்றவர்கள் பாராட்டு தெரிவிக்கும் பொழுது நமது மதிப்பு உயரும்.  (சேவையை குறை சொன்னால் நமது மதிப்பு குறையும். கவனம்)

 

இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியவை

 

  • நிலைத்தன்மை (Consistency):  நாம் கட்டுரைகளை, காணொளிகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும்; இல்லையெனில் மக்களை சென்றடைவது குறையும்.

 

  • துல்லியம் (Accuracy): அப்டேட்களை கொடுக்கும் பொழுது துல்லியம் வேண்டும்.  தவறாக இருந்தால், நம் மீதான் நம்பிக்கை குறையும்.

 

  • போட்டி (Competition): பல ஆலோசகர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளதால், தனித்துவமான அடையாளம் (branding) தேவை.

 

-          இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

📞 95512 91721


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety