Saturday, May 2, 2026

Digital Marketing என்றால்? ஒரு வரி ஆலோசகருக்கு எப்படி பயன்படும்?

 


இணையம், மொபைல், சமூக ஊடகங்கள் போன்ற டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி சேவைகள் அல்லது தொழிலை மக்களிடம் கொண்டு செல்வதே Digital Marketing ஆகும். வாடிக்கையாளர்கள் பலரும் இணையத்தில் தேடுகிறார்கள்.  ஆகையால் அங்கு விளம்பரம் செய்வதே சரியானது.

 

சமகாலத்தில் ஒரு திரைப்படம் எடுத்தால் கூட டிஜிட்டலில் விளம்பரப்படுத்துவதற்கு சில கோடிகளை தாராளமாக செலவழிக்கிறார்கள். மக்கள் எங்கு இருக்கிறோர்களோ, அங்கு நம்முடைய பொருளை, சேவையை சந்தைப்படுத்துதல் அவசியமாகும்.

 

வரி ஆலோசகர் இதை எப்படி செய்யலாம்? என்ன வழிகள் இருக்கின்றன?

 

1, நமக்கான தளம் (Professional Website) :  கூகுள் போன்றவை இலவசமாகவே தருகின்றன. நமது சொசைட்டிக்கான தளம் அப்படித்தான் இயங்குகிறது.   செலவு செய்தால், நமக்கான ஒரு தனித்தளத்தை உருவாக்கலாம். அதில் நமது சேவைகளை விளம்பரப்படுத்தலாம்.  நமது தொழில் நிமித்தம் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வெளியிடலாம்

 

2. சமூக வலைத்தளங்கள் : 

 

அ) பேஸ்புக்/இன்ஸ்டாகிராம் :  நம் தொழில்  சம்பந்தமான மாற்றங்களை, செயல்பாடுகளை சின்னதாய் காணொளிகளை உருவாக்கி வெளியிடலாம்.  பேனர்களை உருவாக்கி வெளியிடலாம்.

 

ஆ)  வாட்சப் ஸ்டேட்ஸ் :  தினசரி நமது தொழில் ரீதியான சில டிப்ஸ்களை, நினைவூட்டல்களை வெளியிட்டால், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சென்றடைடயும்.

 

இ.  வாட்சப் வழியாக : வாடிக்கையாளர்களுக்கு தேவையான அப்டேட் செய்திகளை தெரிவிப்பதன் மூலம் அவர்களை பயிற்றுவிக்கலாம். தவறுகள் குறையும். நம் மீதும் நம்பிக்கை வளரும்.

 

ஈ) மின்னஞ்சல் வழியாக :   ஜி.எஸ்.டி மாற்றங்களை, வருமான வரி குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து அனுப்பலாம். இதை மின்னஞ்சல் வழியாக தானாகவே செல்லும்படியும் நாம் அனுப்பலாம்.

 

உ) யூடியூப் சானல் :    ஜி.எஸ்.டி, வருமானவரி போன்ற தலைப்புகளை தொடர்ச்சியாக சிறிய காணொளிகளை வெளியிடலாம். 

 

ஊ) கூகுள் மூலம் :   அருகில் உள்ள வரி ஆலோசகர்” என தேடும் பொழுது, நமது பெயரை வரவழைக்கலாம். அதிலும் நமது சேவையை பெற்றவர்கள் பாராட்டு தெரிவிக்கும் பொழுது நமது மதிப்பு உயரும்.  (சேவையை குறை சொன்னால் நமது மதிப்பு குறையும். கவனம்)

 

இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியவை

 

  • நிலைத்தன்மை (Consistency):  நாம் கட்டுரைகளை, காணொளிகளைத் தொடர்ந்து வெளியிட வேண்டும்; இல்லையெனில் மக்களை சென்றடைவது குறையும்.

 

  • துல்லியம் (Accuracy): அப்டேட்களை கொடுக்கும் பொழுது துல்லியம் வேண்டும்.  தவறாக இருந்தால், நம் மீதான் நம்பிக்கை குறையும்.

 

  • போட்டி (Competition): பல ஆலோசகர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளதால், தனித்துவமான அடையாளம் (branding) தேவை.

 

-          இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

📞 95512 91721


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

GSTPS : 175th Zoom meeting successfuly held

 


இன்றைய GSTPS சொசைட்டியின் 175வது ஜூம் கூட்டம் திரளான உறுப்பினர்களுடன், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலர் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றது.

 

இந்த அமர்வில், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரி விதிப்பு மற்றும் வசூல் தொடர்பான முக்கிய அம்சங்களை ஒருங்கிணைந்த பார்வையில் விளக்கமாக Dr. வில்லியப்பன் எடுத்துரைத்தார்.

 

முதன்மையாக, எந்த பரிவர்த்தனைகள் வழங்கல் ஆக கருதப்படுகின்றன, அவை எப்போது வரிக்குட்படும் என்பதற்கான அடிப்படை புரிதலை தெளிவுப்படுத்தினார்.

 

தொடர்ந்து, வழங்கல்களின் வகைப்பாடு (கூட்டு மற்றும் கலப்பு) சரியாக இருக்க வேண்டிய அவசியமும், தவறான அணுகுமுறையால் ஏற்படும் கூடுதல் வரிச் சுமை அபாயத்தையும் சுட்டிக்காட்டினார்.

 

அதன்பின், வரி விதிப்பு நடைமுறைகள், குறிப்பாக பெறுநர் வரி செலுத்தும் சூழ்நிலைகள் போன்ற முக்கிய அபாயப் பகுதிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

 

சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பொருந்தக்கூடிய தொகுப்பு திட்டத்தின் நடைமுறை பயன்கள் மற்றும் அதன் வரம்புகளையும் எடுத்துரைத்தார்.

 

மேலும், வரி பொறுப்பு உருவாகும் நேரம், விகித மாற்றங்களின் தாக்கம், மற்றும் வழங்கலின் மதிப்பு கணக்கீடு போன்ற நடைமுறை முக்கிய அம்சங்கள் எளிமையாக விளக்கினார்.

 

இத்துடன், சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட டிஜிட்டல் மாற்றங்கள், இணக்க நடைமுறைகளின் கடுமை, மற்றும் தவறுகள் ஏற்பட்டால் ஏற்படும் வட்டி, அபராதம் போன்ற விளைவுகள் பற்றியும் விளக்கினார்.

 

இறுதியாக, இந்த தலைப்பில் துல்லியமான அணுகுமுறை இல்லையெனில், நிதி இழப்பு மட்டுமின்றி, தொழில்முறை நம்பகத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் வலியுறுத்தினார்.

 

கடந்த முறை ஆங்கிலத்தில் தயார் செய்திருந்தார்.  தமிழில் தயார் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் ஆங்கில கலப்பே இல்லாமல் இந்த முறை தமிழில் தயார் செய்திருந்தார். 

 

கொஞ்சம் டல் மாணவர்களின் புரிதலை கணக்கில் கொண்டு கொஞ்சம் மெதுவாக எடுங்கள் என கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர் வழக்கமாய் வேகமாய் விளக்குவார். இந்தமுறை கொஞ்சம் அந்த வேகத்தை குறைத்துக்கொண்டார்.  நன்றி.

 

வகுப்பு எடுத்து முடிந்ததும், கேள்வி பதில்களில் நிறைய கேள்விகள், சந்தேகங்களை கேட்டதற்கு, பேச்சாளரும், நிர்வாகிகளும் பதில் அளித்தார்கள். வழக்கறிஞர் திரு. இளஞ்செழியன் அவர்களும் கலந்துகொண்டு பதில் அளித்தார். அவருக்கு நன்றி.

 

கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

 

கூட்டங்களைப் பொறுத்தவரை , ஒரு பேச்சாளர் பொதுவாக எத்தனை அனுபவம் இருந்தாலும், இந்த கூட்டத்திற்காக சிறப்பாக படித்து, பிபிடி தயாரித்து பேசுவதற்கு குறைந்த பட்சம்  இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறார்.

 

இந்த மாதிரி கூட்டங்களை கலந்துகொள்ளும் பொழுது தான், ஒவ்வொரு செக்சனும் மற்ற செக்சனுகளுடன் ஊடும் பாவுமாய் கலந்து இருக்கிறது என தெரியவருகிறது.  ஒவ்வொரு கூட்டமும் நமக்கு அறிவையும், தெளிவையும் தருகிறது. தவறவிடுவது நமக்கு தான் பெரிய இழப்பு.  ஆகையால்  கூட்டங்களில் தவறாது கலந்துகொள்வோம்.

 

நன்றி.


- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety