Monday, May 18, 2026

Indistractable : கவனம் சிதறும் காலத்தில், கவனத்தை காப்பது எப்படி?

 


இன்றைய தொழில்முறை வாழ்க்கையில் அறிவு மட்டும் போதுமானதல்ல. அந்த அறிவை எந்த இடையூறும் இல்லாமல், தொடர்ந்து பயன்படுத்தும் திறனும் மிக அவசியமாகியுள்ளது.

 

குறிப்பாக வரி ஆலோசகர்கள், தணிக்கையர்கள், சட்ட ஆலோசகர்கள் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் தொலைபேசி அழைப்புகள், வாடிக்கையாளர் செய்திகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடக அறிவிப்புகள், அவசர கோப்புகள் என எண்ணற்ற இடையூறுகள் இருக்கும்.

 

இந்த சூழலில், ஆழமான சிந்தனை (Deep Work) மற்றும் தொடர்ச்சியான கவனம் (Focus) ஆகியவை மெதுவாக குறைந்து கொண்டிருக்கின்றன.  அத்தகைய காலத்தில் மிக முக்கியமாகப் பேசப்படும் நூல்களில் ஒன்று தான்  Indistractable.

 

இந்த நூலை எழுதியவர் Nir Eyal. நடத்தை அறிவியல் (Behavioral Science) மற்றும்மனித கவன மேலாண்மை” குறித்து ஆராய்ந்து வருகிறார்.

 

கவனம் சிதறுவதற்கு தொழில்நுட்பம் மட்டும் காரணமல்ல; நமது உள்ளார்ந்த மனநிலைகளும் முக்கிய காரணம் என்கிறார்.

 

பலர் சமூக ஊடகங்கள், மொபைல், அறிவிப்புகள் ஆகியவற்றை குறை கூறினாலும்,  சலிப்பு, மன அழுத்தம், கவலை, தப்பிக்க நினைக்கும் மனநிலை போன்ற உள்ளார்ந்த தூண்டுதல்களே (Internal Triggers) மனிதர்களை கவனம் சிதறச் செய்கின்றன என்று விளக்குகிறார்.

 

இந்த நூல் வலியுறுத்தும் முக்கியமான அணுகுமுறைகள்

 

1. உள்ளார்ந்த தூண்டுதல்களை அடையாளம் காணுதல்

 

கவனம் சிதறும் தருணங்களை வெறும் பழக்கமாக பார்க்காமல், அதன் பின்னுள்ள மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார்.

 

2. “To-do List” விட “Time Blocking”

 

செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல் மட்டும் போதாது. எந்த நேரத்தில் எந்தப் பணியை செய்வது என்பதை முன்கூட்டியே நேர அட்டவணையில் நிர்ணயிக்க வேண்டும்.

 

3. வெளிப்புற இடையூறுகளை கட்டுப்படுத்துதல்

 

மொபைல் அறிவிப்புகள், திட்டமிடப்படாத கூட்டங்கள், தொடர்ந்து வரும் செய்திகள் போன்றவை உற்பத்தித்திறனை பாதிக்கின்றன. அவற்றை நிர்வகிக்கும் ஒழுங்கு அவசியம்.

 

4. தன்னாட்சி ஒப்பந்தங்கள்

 

தனக்குத்தானே விதிமுறைகள் அமைத்துக்கொள்வது, பிறரிடம் உறுதி அளிப்பது,  தேவையான தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவது போன்ற முறைகள் மூலம் கவனத்தை பாதுகாக்கலாம்.

 

 “Traction” மற்றும் “Distraction”

 

  • இலக்கை நோக்கி நகர்த்தும் செயல்கள்Traction
  • இலக்கிலிருந்து விலக்கும் செயல்கள்Distraction

 

இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக அறிதலே, கவன மேலாண்மையின் அடிப்படை என்று ஆசிரியர் விளக்குகிறார்.

வரி ஆலோசகர்கள் போன்ற தொழில்முறை நபர்களுக்கு இந்த நூல் மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது.

ஒரு கோப்பில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் கூட, இடையறாத அழைப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் சிந்தனையை முறித்துவிடுகின்றன.

 

அந்த சூழலில்:

  • நேர பகிர்வு (Time Blocking)
  • கவன பாதுகாப்பு முறைகள்
  • இடையூறு மேலாண்மை
  • மன ஒழுங்கு

போன்ற கருத்துகள் நடைமுறையில் உண்மையான பயனை வழங்கக்கூடியவை.

 

Indistractable நூல், வெறும் உற்பத்தித்திறன் (Productivity) குறித்து மட்டும் பேசும் நூல் அல்ல.
அதுதன்னுடைய கவனத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?” என்ற அடிப்படை கேள்வியை எழுப்பும் நூல்.

 

இன்றைய டிஜிட்டல் சூழலில், அறிவை விடகவனத்தை பாதுகாக்கும் திறன்தான் மிகப்பெரிய போட்டி திறனாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நூல் கவனப்படுத்துகிறது.

 

இறுதியாக..

தொடர்ந்து கற்றுக்கொண்டு இருக்கும் தொழில்முறை நபர்களுக்கு, எப்படி அதிகமாக வேலை செய்வது?” என்பதை விட, “எப்படி சிதறாமல் வேலை செய்வது?” என்பதே சமகாலத்தில் முக்கியமான கேள்வி. அந்தக் கேள்விக்கான நடைமுறை வழிகாட்டிகளில் முக்கியமான ஒன்றாக இந்த நூலை பார்க்கலாம்.

 

கவனத்தை கட்டுப்படுத்த முடியாதவர், தன் வாழ்க்கையையே கட்டுப்படுத்த முடியாது


-          இரா. முனியசாமி

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

📞 95512 91721

 

Sunday, May 17, 2026

Not One in a Million (2018) — ஒரு பட்டய கணக்காளர் எழுதிய புத்தக அறிமுகம்

 


சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த O.P. Singhania, பட்டய கணக்காளர்  எழுதிய இந்த நூல், வழக்கமானவெற்றிக் கதைவடிவில் எழுதப்பட்ட சுயசரிதை அல்ல. இது ஒரு தொழில்முறை மனிதர் எப்படி உருவாகிறார், ஒரு பெயர் எப்படி நம்பிக்கையாக மாறுகிறது, ஒரு அலுவலகம் எப்படி ஒரு நிறுவனமாக வளர்கிறது என்பதைக் காட்டும் அனுபவங்களை கொண்ட புத்தகம்.

 

1. சிறிய நகரிலிருந்து தொழில்முறை உயரம் வரை

 

நூலின் தொடக்கப் பகுதிகளில் அவருடைய குடும்பப் பின்னணி, கல்விப் பயணம், ஆரம்ப சிரமங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. இன்றைய தலைமுறைக்கு எளிதாகத் தோன்றும் பல வசதிகள் அப்போது இல்லாத காலகட்டம். அந்த சூழலில் தொழில்முறை கல்வியைத் தேர்வு செய்வது எவ்வளவு கடினம் என்பதையும் நூல் உணர்த்துகிறது.

 

இது வெறும்போராட்டக் கதைஅல்ல. “சூழல் குறைவாக இருந்தாலும் தொழில்முறை தரத்தை இழக்காமல் வளர முடியுமா?” என்ற கேள்விக்கான நடைமுறை பதிலாக அமைகிறது.

 

2. பட்டயக் கணக்காளர் தொழிலின் உண்மையான முகம்

 

பலர் நினைப்பது போல பட்டயக் கணக்காளர் தொழில் என்பது கணக்குகள் மற்றும் வரி கணக்கீடுகள் மட்டுமல்ல!

 

  • வாடிக்கையாளர் நம்பிக்கை
  • நேர்மை
  • இரகசியத் தன்மையைப் பாதுகாத்தல்
  • காலக்கெடு ஒழுக்கம்
  • சட்டத்தைப் புரிந்து பயன்படுத்தும் திறன்
  • மனிதர்களை கையாளும் திறன்

 

ஒரு நல்ல வரி ஆலோசகர் என்பதுசட்டம் தெரிந்தவர்மட்டும் அல்ல; “நம்பிக்கைக்குரியவர்என்பதையும் நூல் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.

 

3. வாடிக்கையாளர்களுடன் உருவாகும் உறவுகள்

 

பல வருடங்கள் ஒரே வாடிக்கையாளர்களுடன் பணியாற்றும்போது உருவாகும் உறவு, தொழிலைத் தாண்டி மனிதநேய அடிப்படைக்கு செல்கிறது என்பதை ஆசிரியர் பல நிகழ்வுகள் மூலம் பதிவு செய்கிறார்.

 

சில இடங்களில், வரி ஆலோசகர் என்பதுகட்டணம் பெறும் நபர்அல்ல; குடும்ப முடிவுகளிலும், வணிக நெருக்கடிகளிலும், தலைமுறை மாற்றங்களிலும் ஆலோசனை தரும் நம்பிக்கையான ஒருவராக மாறுகிறார் என்பதும் தெரிகிறது.

 

4. தொழில்முறை ஒழுக்கம்

 

சில இடங்களில் விரைவான லாபத்தை விட நீண்டகால நம்பிக்கையை அவர் முக்கியமாகக் கருதிய விதம் கூறப்படுகிறது.

 

குறிப்பாக:

  • தவறான வழிகளில் வாடிக்கையாளரை காப்பாற்ற மறுத்த தருணங்கள்
  • சட்ட வரம்புகளை மதித்த அணுகுமுறை
  • எல்லோரும் இப்படித்தான் செய்கிறார்கள்என்ற மனநிலைக்கு எதிரான நிலைப்பாடு

 

5. தொழில் வளர்ச்சி என்பது அலுவலக வளர்ச்சி மட்டும் அல்ல

 

ஒரு தொழில்முறை நிறுவனம் வளர்வது என்பது:

  • அதிக வருமானம்,  பெரிய அலுவலகம்,
  • அதிக வாடிக்கையாளர்கள் இவையால் மட்டும் தீர்மானிக்கப்படாது.

 

அதற்கு பதிலாக:

  • நற்பெயர்,
  • தொடர்ச்சியான தரம்,
  • நம்பகத்தன்மை,
  • குழு பண்பாடு,
  • அறிவுப் பகிர்வு
    இவையே நீண்டகால அடித்தளமாக இருப்பதை ஆசிரியர் உணர்த்துகிறார்.

 

6. தலைமுறை மாற்றம் மற்றும் நிறுவனம் கட்டியெழுப்புதல்

 

தனிநபர் திறமையைத் தாண்டி, ஒரு நிறுவனம் தலைமுறைகள் கடந்து நிலைக்க வேண்டுமெனில் என்ன தேவை?

 

ஏனெனில் இந்தியாவில் பல பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள்:

  • ஒரே நபரை மையமாகக் கொண்டு தொடங்குகின்றன;
  • ஆனால் அடுத்த தலைமுறைக்கான திட்டமிடல் இல்லாமல் பலவீனமடைகின்றன.

இந்தப் பின்னணியில், ஆசிரியரின் அனுபவங்கள் நடைமுறை சிந்தனைகளைத் தருகின்றன.

 

7. மொழிநடை மற்றும் வாசிப்பு அனுபவம்

 

எளிமையான மொழி. அதிக சுயபுகழ்ச்சி இல்லாத நடை. அனுபவங்களை அமைதியாக பதிவு செய்யும் பாணி.

 

அதனால் இந்த நூல்ஊக்கமான புத்தகம்போல சத்தமாக பேசுவதில்லை. ஆனால் மெதுவாக தொழில்முறை வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.

 

இறுதியாக..

 

இந்த நூலை வாசித்த பிறகு கிடைக்கும் முக்கியமான உணர்வு

 

தொழில்முறை வாழ்க்கையில் பெரிய வெற்றி என்பது புகழ் அல்ல; பல ஆண்டுகள் கழித்தும் மக்கள் நம்பிக்கையுடன் உங்கள் பெயரை சொல்லுவது தான்.”

 

- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721