Wednesday, May 27, 2026

AIன்னா என்னடா இது?

 


AIன்னா என்னடா இது?

 

இப்போ எங்கே பார்த்தாலும் AI… YouTube திறந்தாலும் AI. மொபைல் வாங்கினாலும் AI. அலுவலக கூட்டத்திலும் கூட “AI integration”ன்னு பேசுறாங்க. இதைக் கேட்ட சிலருக்கு: “இது உலகத்தையே கைப்பற்றப் போகிறதாம்!” ன்னு பயம்.

 

மற்ற சிலருக்கு: “AI இருந்தா இனிமேல் வேலை செய்யவே தேவையில்லை!” ன்னு அதீத நம்பிக்கை. உண்மையிலே இந்த இரண்டுமே முழு உண்மை இல்லை.

 

எளிமையாக சொன்னால்

 

AI என்பது: “நிறைய தகவல்களைப் பார்த்து, அதிலிருந்து முறைகளை (pattern) கற்றுக்கொண்டு, அடுத்ததாக என்ன வரலாம் என்று கணிக்கும் தொழில்நுட்பம்.” தான்.

 

இதைக் கேட்டு சிலர்: “அப்போ இது மனித மூளை மாதிரியா?” ன்னு கேட்கிறார்கள். இல்லை. மனிதன் புரிந்து யோசிப்பான். AI கணக்கிட்டு கணிக்கும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு.

 

வரித்துறையிலேயே எடுத்துக்கொள்ளுங்கள்

 

ஒரு அனுபவமுள்ள ஜி.எஸ்.டி ஆலோசகரிடம் நோட்டிசு கொடுத்தால்அவர் முழுவதையும் படிக்காமலேயே: “இது ITC mismatch பிரச்சனை போல…” “இது probably 3B vs GSTR-1 பிரச்சனை…” “இதுக்கு துறை வழக்கமாக என்ன கேட்கும் தெரியும்…” என்று உடனே ஒரு கணிப்பு வரலாம்.

 

ஏன்? ஏற்கனவே ஆயிரக்கணக்கான கோப்புகளை பார்த்த அனுபவம். AI-யும் அதே மாதிரி தான். கோடிக்கணக்கான தகவல்களைப் பார்த்து: “இந்த கேள்விக்குப் பிறகு பொதுவாக என்ன பதில் வரும்?” என்று மனம் கணிக்கிறது.

 

ஆனா இங்க தான் முக்கியமான டிவிஸ்ட் இருக்கு

 

பலர் நினைப்பது: “AI சொன்னா சரிதான்.” அதுதான் ஆபத்து. ஏன்னா AIக்கு: வெட்கம் கிடையாது, மானம் கிடையாது.  மன்னிக்கவும்.  தயக்கம் கிடையாது, “எனக்கு தெரியாதுன்னு சொல்லும் பழக்கம் குறைவு. தவறான தகவலாக இருந்தாலும்அதை நம்பிக்கையுடன் சொல்லிவிடும்.

 

சில நேரம்: இல்லாத வழக்குகளை கற்பனையில் உருவாக்கும், தவறான செக்சனை சுட்டிக்காண்பிக்கும். பழைய சர்க்குலரை அமுலில் உள்ளது மாதிரி சொல்லும், கணக்கீடு செய்வதில் பிழை விடும். ஆனா படிக்கிறவர்களுக்கு அது தெரியாமல் போகலாம். ஏன்னா அதனுடைய வழங்கும்முறை ரொம்ப தெளிவாக இருக்கும்.

 

இதுதான் இப்போ நடக்கும் பெரிய பிரச்சனை

 

முன்னாடி: கூகுளில் இருந்து காபி பேஸ்ட் பண்ணினார்கள்.  இப்போ: “ChatGPT இருந்து காபி பேஸ்ட்பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனா சரிபார்க்கிற பண்ணுற பழக்கம் மட்டும் இன்னும் வரல. அதுதான் ஆபத்து.

 

AI எதுக்கு நல்லா பயன்படும்?

 

சரியாக பயன்படுத்தினால் நிறைய பயன் இருக்கு.

குறிப்பாக:

  • Notice draft,
  • Client mail,
  • Reconciliation analysis,
  • Data sorting,
  • Excel formula help,
  • Legal summary,
  • Research starting point

இவைகளில் நேரத்தை மிச்சப்படுத்தும். ஒரு வேலைக்கு 3 மணி நேரம்  எடுத்துக்கொண்டது… 30 நிமிடமாக குறையலாம். அதனால்தான் உலகமே இதைப் பற்றி பேசுகிறது.

 

ஆனா ஒரு விஷயம் மட்டும் மறக்கக்கூடாது

 

AI:  தகவல் தரும் கருவி.”  மனிதன்: “பொறுப்பு ஏற்கும் நபர்.” இந்த இரண்டு வேறுபாடு இன்னும் மாறவில்லை. துறை சார்ந்த நோட்டிசு வந்தால்… “இதைக் ChatGPT தான் சொன்னது சார்…” ன்னு சொல்லி தப்பிக்க முடியாது.

 

கையெழுத்து போட்டது யார்? பதிலை தாக்கல் செய்தது யார்? ஆலோசனை கொடுத்தது யார்? இறுதியில் மனிதர்தான் பொறுப்பேற்கவேண்டும்.

 

அடுத்த காலத்தில் என்ன ஆகும்?

 

முன்பு: “கணிப்பொறி தெரிந்தவர்முன்னேறினார்கள். இப்போது: “AI- சரியாக பயன்படுத்த தெரிந்தவர்முன்னேற ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

ஆனா இன்னும் முக்கியமானவர்கள் யார் தெரியுமா? AI சொல்வதை கூட cross-check செய்ய தெரிந்தவர்கள். ஏன்னாகருவி புத்திசாலி ஆகலாம். ஆனா தீர்மானம் இன்னும் மனிதரிடமே இருக்கு.

 

இறுதியாக...

 

AI என்பது சினிமாவில் காட்டுவது போல உலகத்தை கைப்பற்ற வந்த ரோபோ இல்லை.

 

அதே நேரத்தில்: “இதெல்லாம் வெறும் hype” ன்னு dismiss பண்ணக்கூடிய விஷயமும் இல்லை. இது ஒரு சக்திவாய்ந்த கருவி. சரியாக பயன்படுத்தினால்: நேரத்தை மிச்சப்படுத்தும். சிந்திக்காமல் நம்பினால்: பிரச்சனையை வேகமாக பெரிதாக்கும்.

 

அதனால்... AI-ஐப் பார்த்து பயப்பட வேண்டாம். ஆனால் சோதிக்காமல் நம்பவும் வேண்டாம்.

           

- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

Tuesday, May 26, 2026

AI பயன்பாடு - நீதிமன்றங்கள் என்ன கருதுகின்றன?

 


வரி ஆலோசனை அலுவலகங்களில் இப்போது ஒரு புதிய காட்சி சாதாரணமாகிவிட்டது. முன்பு மேசை முழுக்க புத்தகங்கள் இருக்கும். இப்போது திரை முழுக்க செயற்கை நுண்ணறிவு. ஒரு பக்கம் சட்டத் தீர்ப்புகள். மற்றொரு பக்கம் மனு வரைவு. அடுத்த சாளரத்தில்இந்த வழக்குக்கு ஏற்ற தீர்ப்புகள் என்ன?” என்று கேட்கும் உரையாடல்.

 

பலருக்கும் ஒரு சந்தேகம்: “இனி வழக்கறிஞர்களை விட, இயந்திரங்கள்தானா சட்டத்தை நடத்தப் போகின்றன?” இந்தக் கேள்விக்குத்தான் உலகம் முழுவதும் நீதிபதிகள் மெதுவாகவும், ஆனால் மிகவும் தெளிவாகவும் பதில் சொல்லத்  தொடங்கி இருக்கிறார்கள்.

 

அவர்கள் சொல்வது ஒன்றே ஒன்று:  கருவி உதவலாம். ஆனால் தீர்மானிக்கக் கூடாது.” இதன் பின்னால் ஒரு பெரிய அனுபவம் இருக்கிறது.

 

ஏனெனில் செயற்கை நுண்ணறிவு சில நேரங்களில் மிகவும் நம்பிக்கையுடன் பொய் பேசுகிறது. இல்லாத தீர்ப்பை இருந்தது போல காட்டும். ஒரு நீதிமன்றம் சொல்லாத கருத்தை மேற்கோள் காட்டும். ரத்து செய்யப்பட்ட சுற்றறிக்கையை இன்னும் நடைமுறையில் இருப்பது போல விளக்கும்.  இதைக் காணும்போது முதலில் பயப்படுவது புதியவர்கள் அல்ல. நீதிபதிகள்தான்.

 

அமெரிக்காவில் பல வழக்குகளில் இல்லாத தீர்ப்புகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சம்பவங்கள் நடந்தன. அபராதங்களும் விதிக்கப்பட்டன. சிலர் தொழில்முறை ஒழுக்க நடவடிக்கைகளையும் சந்தித்தார்கள்.

 

அதன்பிறகு நீதிபதிகள் மிகவும் நேராக ஒரு கருத்தைச் சொல்ல ஆரம்பித்தார்கள்:


செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தவறு அல்ல. ஆனால் அதை சரிபார்க்காமல் பயன்படுத்துவது பொறுப்பின்மை.”

 

இந்திய நீதித்துறையும் இதையே கவனித்து வருகிறது. குறிப்பாக உச்சநீதிமன்றம், “போலியான தீர்ப்பு மேற்கோள்கள்குறித்து கவலை தெரிவித்திருக்கிறது. வழக்கறிஞர் அமைப்புகளும் இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று ஆலோசிக்கத் தொடங்கியுள்ளன.

 

ஏனெனில் சட்டம் என்பது வெறும் தகவல் குவியல் அல்ல. ஒரு வழக்கில்:

·         எந்த உண்மை முக்கியம்?

·         எந்த சாட்சி நம்பத்தகுந்தது?

·         எந்த தீர்ப்பு பொருந்தும்?

·         எந்த அரசியலமைப்பு மதிப்பு முன்னுரிமை பெற வேண்டும்?

 

இதை இயந்திரம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்பதே நீதித்துறையின் அடிப்படை எண்ணம்.

 

ஒரு நீதிபதி கோபத்தில் சொன்ன ஒரு வாக்கியம் இணையத்தில் மிகவும் பரவியது: இயந்திரத்துக்கு தரவு இருக்கும். மனிதனுக்கு தீர்மானம் இருக்கும்.இதுதான் முழு விவாதத்தின் மையம்.

 

செயற்கை நுண்ணறிவு வேகமாக வேலை செய்யும். ஆயிரம் தீர்ப்புகளை சில விநாடிகளில் தேடித் தரும். நூறு பக்க ஆவணத்தை சுருக்கி தரும். மொழிபெயர்த்து தரும். ஆனால் நீதிமன்றம் கேட்பது வேறு.

 

அதில் எது சரி?”

 

அந்த இறுதி முடிவை இன்னும் மனித சிந்தனையே எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

 

வரி மற்றும் சரக்கு-சேவை வரி துறையில் இது இன்னும் ஆபத்தான பகுதி.

ஏனெனில் இங்கு:

·         நேற்று வந்த சுற்றறிக்கையே இன்று மாறியிருக்கலாம்.

·         ஒரு தீர்ப்பு மேல்முறையீட்டில் தடை செய்யப்பட்டிருக்கலாம்.

·         ஒரு மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பு, மற்றொரு மாநிலத்தில் கட்டாயச் சட்ட நிலையாக இருக்காமல் இருக்கலாம்.

ஆனால் செயற்கை நுண்ணறிவு இதையெல்லாம் சில நேரங்களில் வேறுபடுத்தாமல் பதில் தரும்.

 

இதனால்தான் பல மூத்த வழக்கறிஞர்கள் இப்போது ஒரு சுவாரசியமான ஒப்பீட்டை பயன்படுத்துகிறார்கள்:

 

செயற்கை நுண்ணறிவை, புதிதாக சேர்ந்த இளநிலை ஆய்வாளர் போல நடத்துங்கள். நீதிபதி போல அல்ல.”

 

இந்த ஒப்பீடு மிகவும் துல்லியமானது. ஏனெனில் ஒரு நல்ல இளநிலை ஆய்வாளர்:

·         தகவல் தேடி தரலாம்,

·         பழைய தீர்ப்புகளை எடுத்து தரலாம்,

·         வரைவு தயாரிக்கலாம்.

ஆனால் இறுதியாக கையொப்பமிடுவது அனுபவமுள்ள மனிதர்தான்.

 

இங்கே ஒரு ஆழமான உண்மை இருக்கிறது. நீதிமன்றங்கள் தொழில்நுட்பத்தை எதிர்க்கவில்லை. உண்மையில் அவர்கள் தாமே அதை பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

மொழிபெயர்ப்பு.
வழக்கு தொகுப்பு.
ஆவண சுருக்கம்.
நிர்வாக மேலாண்மை.

இவை எல்லாவற்றிலும் செயற்கை நுண்ணறிவு மெதுவாக நுழைகிறது.

 

ஆனால் நீதிபதிகள் ஒரு கோட்டை தெளிவாக இழுத்து வைத்திருக்கிறார்கள்:


AI உதவலாம். ஆனால் நீதியின் இருக்கையில் உட்கார முடியாது.”

 

ஏனெனில் சட்டம் என்பது வெறும் விதிகளின் கணக்கு அல்ல. அது மனித வாழ்வின் சிக்கல்களோடு சம்பந்தப்பட்ட ஒன்று.

 

ஒரு வரி வழக்கின் பின்னால் ஒரு தொழில் இருக்கலாம். ஒரு தொழிலின் பின்னால் நூறு தொழிலாளர்கள் இருக்கலாம். ஒரு தீர்ப்பின் பின்னால் ஒரு குடும்பத்தின் எதிர்காலம் இருக்கலாம்.  இதையெல்லாம் புரிந்து கொள்ள தரவு மட்டும் போதாது. மனித அனுபவமும் தேவை.

 

அதனால்தான் இன்றைய நீதித்துறை செயற்கை நுண்ணறிவை முழுமையாக நிராகரிக்கவும் இல்லை. முழுமையாக ஒப்படைக்கவும் இல்லை.

 

அவர்கள் அமைதியாகச் சொல்லும் கருத்து இதுதான்: வேகத்தை இயந்திரம் தரலாம். ஆனால் நீதியை மனித மனசாட்சிதான் தீர்மானிக்க வேண்டும்.”

 

-          இரா. முனியசாமி

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்

📞 95512 91721