Thursday, May 28, 2026

Artificial Intelligence: A Guide for Thinking Humans (2019) – புத்தகம் ஒரு அறிமுகம்.

 


AI பற்றி இப்போது உலகம் முழுவதும் ஒரு விசித்திரமான நிலை இருக்கிறது. ஒரு பக்கம் -  “AI எல்லா வேலைகளையும் பறித்துவிடும்என்று பயப்படுகிறார்கள். மற்றொரு பக்கம் - “AI வந்துவிட்டால் மனிதர்கள் தேவையில்லைஎன்று மிகைப்படுத்துகிறார்கள்.

 

இந்த இரண்டு வாதங்களுக்கும் நடுவில் அமைதியாக வந்து நிற்கும் புத்தகம்தான்
Artificial Intelligence: A Guide for Thinking Humans.

 

இந்த நூலை எழுதியிருப்பவர் Melanie Mitchell — செயற்கை நுண்ணறிவு துறையில் நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்து வரும் ஒருவர்.

 

“AI- பயப்படாமல் புரிந்துகொள்ளுங்கள்என்று சொல்லும் புத்தகம்

 

இந்த நூலின் மிகப்பெரிய பலம் என்னவென்றால்… AI- இது கடவுளாகவும் காட்டவில்லை. பேயாகவும் காட்டவில்லை. அதை ஒரு கருவியாகப் பார்க்கச் செய்கிறது.

 

இப்போது இணையத்தில் AI குறித்து பேசுபவர்களில் பலர் இரண்டு வகை: 1. AI என்ன செய்யும் என்று தெரியாமல் பயப்படுபவர்கள்  2. AI என்ன செய்ய முடியாது என்று தெரியாமல் மயங்குபவர்கள் இந்த இரண்டையும் இந்த புத்தகம் மெதுவாக உடைக்கிறது.

 

AI உண்மையில்புரிகிறதா?”

 

இதுதான் இந்த நூலின் ஆழமான கேள்வி.  ஒரு AIயை கொண்டு… கவிதை எழுதலாம். படம் உருவாக்கலாம். சட்டம் பற்றி பேசலாம். மருத்துவ தகவல் சொல்லலாம். ஆனால்அதுபுரிந்துசெய்கிறதா? அல்லதுமுறைகளை கணித்துசெய்கிறதா? இந்த வேறுபாட்டை இந்த நூல் மிகவும் தெளிவாக காட்டுகிறது.

 

மனிதர்கள் - சூழ்நிலையை உணர்கிறார்கள். மறைபொருளை பிடிக்கிறார்கள். அனுபவத்தை பயன்படுத்துகிறார்கள். பொதுவான அறிவை இணைக்கிறார்கள்

 

AI? - அது பெரும்பாலும் தரவின் வழியே மாதிரிகளைப் பிடிக்கிறது. இதுதான் புத்தகத்தின் மைய நரம்பு.

 

ChatGPT போன்ற அமைப்புகளை புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்

 

இப்போது பலர் AI-யிடம் - கட்டுரை எழுத சொல்கிறார்கள். ஆலோசனை கேட்கிறார்கள். வாழ்க்கை முடிவுகள் கூட கேட்கிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகிறார்கள்: AI-க்குஅறிவுஇருப்பது போல தோன்றலாம். ஆனால் அதற்குஅனுபவ வாழ்க்கைகிடையாது. இந்த வித்தியாசத்தை இந்த நூல் மிகவும் அமைதியாகவும் அழுத்தமாகவும் சொல்கிறது.

 

புத்தகத்தின் மிகவும் முக்கியமான பகுதிவரம்புகள்

 

இந்த நூல் AI-யின் சாதனைகளை மட்டும் பேசவில்லை. அதன் குறைகளையும் நேராக சொல்கிறது:

 

பாகுபாடு - தவறான தரவு கொடுத்தால்… AI-யும் தவறாக கற்றுக்கொள்ளும். மனித சமுதாயத்தில் உள்ள பாகுபாடுகள் கூட அதில் பிரதிபலிக்கலாம்.

 

விளக்கம் தர முடியாத நிலை

 

சில நேரங்களில் AI சரியான பதில் தரலாம். ஆனால்: “ஏன் இந்த முடிவை எடுத்தது?” என்று கேட்டால் தெளிவான காரணம் சொல்ல முடியாமல் போகலாம். இது மருத்துவம், நீதித்துறை, வங்கி போன்ற துறைகளில் பெரிய கேள்வி.

 

பொதுவான மனித அறிவு இல்லாமை

 

ஒரு சிறு குழந்தைக்கு தெரியும் விஷயம் கூட AI-க்கு தெரியாமல் இருக்கலாம். இதுதான் பலரை அதிர்ச்சியடையச் செய்கிறது. ஏனெனில் AI “புத்திசாலிபோல தெரியும்.
ஆனால் சில சமயம் மிகவும் சாதாரண தவறுகள் செய்யும்.

 

இந்த நூல் தொழில்நுட்ப புத்தகம் மட்டும் அல்ல

 

இதில் மனித சமூகம் இருக்கிறது. மனித அகம்பாவமும் இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் மனிதர்கள்இப்போது நாம்தான் இறுதி அறிவை கண்டுபிடித்துவிட்டோம்என்று நம்பியிருக்கிறார்கள்.

 

AI காலத்திலும் அதே உணர்ச்சி திரும்பி வருகிறது என்பதை இந்த நூல் மறைமுகமாக உணர்த்துகிறது.

 

யார் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்?

 

இந்த புத்தகத்தை சிந்தித்து வேலை செய்பவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. ஏனெனில்… AI உங்கள் வேலையை உடனே எடுத்துவிடுமா என்பது முக்கியமல்ல. உங்கள் வேலையின் எந்த பகுதியை மாற்றும்? எந்த பகுதியை மாற்ற முடியாது? என்பதை புரிந்துகொள்வதே முக்கியம். இந்த நூல் அந்த சிந்தனையைத் தூண்டுகிறது.

 

இந்த நூலை வாசிக்கும் போது வரும் உணர்வு

 

இதுவாவ் AI!” என்று சொல்லும் புத்தகம் அல்ல. இது: “சரிநிதானமாக யோசிப்போம்.” என்று தோளில் கை வைத்து பேசும் புத்தகம். அதனால் தான் இது மதிப்புடையதாகிறது.

 

செயற்கை நுண்ணறிவு குறித்து மிகைப்படுத்தலும், பயமும்இரண்டும் புரிதல் குறைவிலிருந்தே வருகிறது.”  - — Melanie Mitchell

 

இறுதியாக...

 

AI குறித்து இணையத்தில் தினமும் ஆயிரம் கருத்துகள் வரும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை உணர்ச்சி சார்ந்தவை.  இந்த புத்தகம் மட்டும்: அமைதியாக, ஆதாரங்களுடன், மனித சிந்தனையை மையமாக வைத்து, AI- புரிந்துகொள்ள உதவுகிறது.

 

அதனால் இது ஒரு தொழில்நுட்ப நூல் மட்டும் அல்ல. “மனிதர்கள் தங்களையே மீண்டும் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் இடம்என்றே சொல்லலாம்.


- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

 

Wednesday, May 27, 2026

AIன்னா என்னடா இது?

 


AIன்னா என்னடா இது?

 

இப்போ எங்கே பார்த்தாலும் AI… YouTube திறந்தாலும் AI. மொபைல் வாங்கினாலும் AI. அலுவலக கூட்டத்திலும் கூட “AI integration”ன்னு பேசுறாங்க. இதைக் கேட்ட சிலருக்கு: “இது உலகத்தையே கைப்பற்றப் போகிறதாம்!” ன்னு பயம்.

 

மற்ற சிலருக்கு: “AI இருந்தா இனிமேல் வேலை செய்யவே தேவையில்லை!” ன்னு அதீத நம்பிக்கை. உண்மையிலே இந்த இரண்டுமே முழு உண்மை இல்லை.

 

எளிமையாக சொன்னால்

 

AI என்பது: “நிறைய தகவல்களைப் பார்த்து, அதிலிருந்து முறைகளை (pattern) கற்றுக்கொண்டு, அடுத்ததாக என்ன வரலாம் என்று கணிக்கும் தொழில்நுட்பம்.” தான்.

 

இதைக் கேட்டு சிலர்: “அப்போ இது மனித மூளை மாதிரியா?” ன்னு கேட்கிறார்கள். இல்லை. மனிதன் புரிந்து யோசிப்பான். AI கணக்கிட்டு கணிக்கும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு.

 

வரித்துறையிலேயே எடுத்துக்கொள்ளுங்கள்

 

ஒரு அனுபவமுள்ள ஜி.எஸ்.டி ஆலோசகரிடம் நோட்டிசு கொடுத்தால்அவர் முழுவதையும் படிக்காமலேயே: “இது ITC mismatch பிரச்சனை போல…” “இது probably 3B vs GSTR-1 பிரச்சனை…” “இதுக்கு துறை வழக்கமாக என்ன கேட்கும் தெரியும்…” என்று உடனே ஒரு கணிப்பு வரலாம்.

 

ஏன்? ஏற்கனவே ஆயிரக்கணக்கான கோப்புகளை பார்த்த அனுபவம். AI-யும் அதே மாதிரி தான். கோடிக்கணக்கான தகவல்களைப் பார்த்து: “இந்த கேள்விக்குப் பிறகு பொதுவாக என்ன பதில் வரும்?” என்று மனம் கணிக்கிறது.

 

ஆனா இங்க தான் முக்கியமான டிவிஸ்ட் இருக்கு

 

பலர் நினைப்பது: “AI சொன்னா சரிதான்.” அதுதான் ஆபத்து. ஏன்னா AIக்கு: வெட்கம் கிடையாது, மானம் கிடையாது.  மன்னிக்கவும்.  தயக்கம் கிடையாது, “எனக்கு தெரியாதுன்னு சொல்லும் பழக்கம் குறைவு. தவறான தகவலாக இருந்தாலும்அதை நம்பிக்கையுடன் சொல்லிவிடும்.

 

சில நேரம்: இல்லாத வழக்குகளை கற்பனையில் உருவாக்கும், தவறான செக்சனை சுட்டிக்காண்பிக்கும். பழைய சர்க்குலரை அமுலில் உள்ளது மாதிரி சொல்லும், கணக்கீடு செய்வதில் பிழை விடும். ஆனா படிக்கிறவர்களுக்கு அது தெரியாமல் போகலாம். ஏன்னா அதனுடைய வழங்கும்முறை ரொம்ப தெளிவாக இருக்கும்.

 

இதுதான் இப்போ நடக்கும் பெரிய பிரச்சனை

 

முன்னாடி: கூகுளில் இருந்து காபி பேஸ்ட் பண்ணினார்கள்.  இப்போ: “ChatGPT இருந்து காபி பேஸ்ட்பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனா சரிபார்க்கிற பண்ணுற பழக்கம் மட்டும் இன்னும் வரல. அதுதான் ஆபத்து.

 

AI எதுக்கு நல்லா பயன்படும்?

 

சரியாக பயன்படுத்தினால் நிறைய பயன் இருக்கு.

குறிப்பாக:

  • Notice draft,
  • Client mail,
  • Reconciliation analysis,
  • Data sorting,
  • Excel formula help,
  • Legal summary,
  • Research starting point

இவைகளில் நேரத்தை மிச்சப்படுத்தும். ஒரு வேலைக்கு 3 மணி நேரம்  எடுத்துக்கொண்டது… 30 நிமிடமாக குறையலாம். அதனால்தான் உலகமே இதைப் பற்றி பேசுகிறது.

 

ஆனா ஒரு விஷயம் மட்டும் மறக்கக்கூடாது

 

AI:  தகவல் தரும் கருவி.”  மனிதன்: “பொறுப்பு ஏற்கும் நபர்.” இந்த இரண்டு வேறுபாடு இன்னும் மாறவில்லை. துறை சார்ந்த நோட்டிசு வந்தால்… “இதைக் ChatGPT தான் சொன்னது சார்…” ன்னு சொல்லி தப்பிக்க முடியாது.

 

கையெழுத்து போட்டது யார்? பதிலை தாக்கல் செய்தது யார்? ஆலோசனை கொடுத்தது யார்? இறுதியில் மனிதர்தான் பொறுப்பேற்கவேண்டும்.

 

அடுத்த காலத்தில் என்ன ஆகும்?

 

முன்பு: “கணிப்பொறி தெரிந்தவர்முன்னேறினார்கள். இப்போது: “AI- சரியாக பயன்படுத்த தெரிந்தவர்முன்னேற ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

ஆனா இன்னும் முக்கியமானவர்கள் யார் தெரியுமா? AI சொல்வதை கூட cross-check செய்ய தெரிந்தவர்கள். ஏன்னாகருவி புத்திசாலி ஆகலாம். ஆனா தீர்மானம் இன்னும் மனிதரிடமே இருக்கு.

 

இறுதியாக...

 

AI என்பது சினிமாவில் காட்டுவது போல உலகத்தை கைப்பற்ற வந்த ரோபோ இல்லை.

 

அதே நேரத்தில்: “இதெல்லாம் வெறும் hype” ன்னு dismiss பண்ணக்கூடிய விஷயமும் இல்லை. இது ஒரு சக்திவாய்ந்த கருவி. சரியாக பயன்படுத்தினால்: நேரத்தை மிச்சப்படுத்தும். சிந்திக்காமல் நம்பினால்: பிரச்சனையை வேகமாக பெரிதாக்கும்.

 

அதனால்... AI-ஐப் பார்த்து பயப்பட வேண்டாம். ஆனால் சோதிக்காமல் நம்பவும் வேண்டாம்.

           

- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721