பலரும் பங்கெடுக்கவேண்டும். இடம் நன்றாக, சுத்தமாக இருக்கவேண்டும். குறைவான செலவில் இருக்கவேண்டும் என்ற அக்கறையில் நேரில் பார்த்து, பேசி, நாலு இடத்தில் விசாரித்து, புளு பே ரிசார்ட் என நிர்வாகிகள் அறிவித்தார்கள்.
இந்தமுறையும் பயணம்
செல்கிறோம் என அறிவித்ததும்… கடந்த காலங்களில் சென்ற பயணத்தின் அலைகள் நினைவுகளில்
எல்லோருக்கும் உள்ளுக்குள் எழத்துவங்கிவிட்டன. வரிசையாக பயணத்திற்கு தயாரானார்கள்.
எல்லோருக்கும்
கலந்துகொள்ளவேண்டும் என ஆர்வம் இருந்தாலும், வெளியூர் பயணம், ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த
வேலைகள், உடல்நிலை, விடுப்பு கிடைக்காதது என வாழ்க்கையின் சிரமங்கள் எப்பொழுதும் நம்மை
சூழலில் உள்ளிழுத்து சுற்றவைத்துக்கொண்டே இருக்கின்றன.
உடல்நலக்குறைவால்
கடைசி நேரத்தில் மூவர் வர இயலவில்லை, பெரியப்பா இறந்துவிட்டார் என ஒருவர் வர இயலவில்லை.
வங்காளவிரிகுடாவின்
கரையோரத்தில் Blue Bay Resort
பயணம் செல்லும்
நம்மை வாழ்த்தி, இன்றைக்கு வெயில் அடக்கி வாசித்தது. குளு குளு ஏசி பேருந்தும் நம்மை
சிரமப்படாமல் கொண்டு சேர்த்தது. பேருந்தில் தந்த இனிப்பும், காரமும் சுவைத்தது.
மதிய நேரம். பசித்தது.
மரத்தின் நிழலில்… மலரினும் மெல்லிய சப்பாத்தி, சுவையான வெஜ் புலாவ், குருமா, அப்பளம்,
தயிர் சோறும், மாங்காய் ஊறுகாயும் எல்லோருடைய பசியையும் நன்றாக போக்கின.
கடந்து வந்த காலடிச்சுவடுகள்
ரிசார்ட்டை அடைந்ததும்…
குளிர்பானம் தந்தார்கள். சிறிது நேரத்திலேயே கூட்டத்திற்கான ஏற்பாடை செய்தார்கள். கடந்த
ஒரு ஆண்டில் (ஜூலை 2024 துவங்கி ஜூன் 2025 வரை நமது கூட்டங்களைப் பற்றிய தொகுப்பை நிர்வாகிகள்
தொகுத்து வழங்கினார்கள். சில விசயங்களை உணர வைக்கிறது. பெரும்பாலும் நமது நிர்வாகிகளும்,
உறுப்பினர்களுமே உரையாற்றியிருக்கிறார்கள். வெளியில் இருந்தும் பேசும் பேச்சாளர்கள்
கணிசமாக குறைந்திருக்கிறார்கள்.
நிர்வாகிகளின்
முன்முயற்சியில் புதியவர்களுக்கு, ஜிஎஸ்டி வகுப்பை பத்து நாட்கள் பயிற்றுவித்திருக்கிறோம்.
புதிய பேச்சாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
எல்லோரும் இல்லாவிடினும், சிலராவது சொசைட்டியினுடான பயணத்தில் ”கற்றதும், பெற்றதும்”
என பேசச் சொல்லியிருக்கலாம் என தோன்றியது.
பரபரப்பான பட்டிமன்றம்
தலைப்பு : "ITC - GST சட்டத்தில் சாதகமா? பாதகமா?"
தலைவர்: திரு. S. செந்தமிழ் செல்வன் அவர்கள்.
சாதகம்
திரு. செண்பகம்
திரு. கைலாஷ்மூர்த்தி
திரு. சந்திரசேகர்
திரு. செந்தில்முத்து
பாதகம்
Dr. வில்லியப்பன்
திரு. முருகன்திருமதி பொன்மணி
பட்டிமன்றம் துவங்கியது. தலைப்பே விவாதப் பொருளாய் மாறி போனதை தலைவர்
நினைவூட்டினார். இரண்டு அணி பேச்சாளர்களும் தத்தம் அணிக்கு சட்டம், நடைமுறை, வணிகர்களின் சிரமம் என எல்லா வகையிலுமே வலுச்சேர்த்தார்கள். இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாக ஜூரம் வந்ததால், கடைசி நேரத்தில் கலந்துகொள்ள முடியாதவர்
தொலைபேசி வழியாக தன் வாதங்களை முன்வைத்தார். எல்லோருடைய பேச்சிலும் நிதானம், ஆவேசம்,
நகைச்சுவை என பல உணர்வுகள் கலந்து கட்டி வெளிவந்தன.
பேச்சாளர்களின்
வாதங்களுக்கு இடையே பார்வையாளர்கள் கைத்தட்டினார்கள். அரங்கம் அதிர சிரித்தார்கள்.
உணர்ச்சி வசப்பட்டு வாதங்களை எடுத்து கொடுத்தார்கள். வென்ற ”சாதகம்” அணிக்கும், பங்குகொண்ட
”பாதகம்” அணிக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
வாதங்கள் நினைவில்
நன்றாக பதிந்தன. புதிய பேச்சாளர்களை கண்டடைந்திருக்கிறோம். பட்டிமன்றம் ஒரு அருமையான
வடிவம். நிகழ்வின் வெற்றியில், இனி இடையிடையே பட்டிமன்றம் நேரடிக்கூட்டங்களில் அரங்கேறும்
என உணரமுடிந்தது.
புதிதாய் இணைந்தவர்களுக்கு
சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கப்பட்டன.
இரண்டு மணி நேரத்தில்
இரண்டு நிகழ்வுகளும் முடிவடைந்தன. சுவையான வடையும், இதமான காபியும் இன்னும் உற்சாகம்
தந்தன.
குளமும், குதூகலமும்
குளத்தில் குதூகலத்தோடு
குதித்தார்கள். மணிக்கணக்கில் பந்து விளையாடினார்கள். நீச்சலடித்தார்கள். குளோரின்
மெல்லிதாய் மூக்கில் ஏறினாலும், கண்ணை கசக்க வைத்தாலும், மணிக்கணக்கில் ஊறிக்கிடந்தார்கள்.
அடுத்தநாள் கிளம்பும் பொழுது, ”குளத்தில் குளித்துவிட்டு போகலாமே!” ஒருவர் ஏக்கமாய்
சொன்னார். கடந்த ஆண்டில் குளித்த ஏகாட்டூர் ரிசார்ட் நன்னீர் குளம் நினைவில் வந்துபோனது.
பலரையும் பங்கெடுக்க
வைத்து கிரிக்கெட் விளையாடினார்கள். இறகு பந்து விளையாடினார்கள். இப்பொழுது மாதம் இருமுறை
கிரிக்கெட் விளையாடலாம் என ஒரு உறுப்பினர் ஆலோசனை தந்துள்ளார்.
சப்பாத்தி, பன்னீர்
பட்டர் மசாலா, பிரியாணி, குழம்பு, சாலட், இனிப்பு, ஐஸ்கீரிம் என வரிசைக் கட்டி இருந்தன.
இரவில் எழுந்த கடல் அலைகளின் ஓசையோடு, கதைத்தப்படியே எல்லோரும் மெல்ல உணவுண்டார்கள்.
ஒன்றை அபிநயம்
காண்பித்து, கடைசி வரை அணியினர் சரியாக செய்யவேண்டும் என விளையாட்டு. அபிநயத்தில் பலரும் ஆச்சர்யப்படுத்தினார்கள். சிறப்பாக
நடித்த, வருத்தத்தில் இருந்த என பலருக்கும் பரிசுகள் தந்து ஆற்றுப்படுத்தினார்கள்.
எல்லோருக்கும்
அருமையான மரத்தால் ஆன நல்ல சுத்தமான கூடுகள்.
கடலோரத்தில் குளுகுளுவென இரவு தூக்கம்.
சில விசயங்கள்
எப்பொழுதும் அலுக்காது. குழந்தையின் புன்சிரிப்பு, அசைந்து வரும் யானை வரிசையில் கடலும்
இடம்பெறும். அதிகாலை கடல் அனுபவம் இன்னும் சிறப்பு.
5.46க்கு சூரிய
உதயம் காண, பலரும் வந்து கடற்கரையில் காத்திருந்தோம். சிலர் அலைகளோடு விளையாடினார்கள்.
கதை பேசினார்கள். சிலர் நடந்தார்கள். இந்த காலை அனுபவம் இன்னும் பல நாட்கள் நினைவில்
நிற்கும்.
மீண்டும் குளத்து
குளியல். இட்லி, தோசை, பொங்கல், வடை, பிரெட், ஜாம், பட்டர் என வரிசைக்கட்டியது. பொங்கலும், வடையும் போட்டியில் வெற்றிபெற்றன.
நினைவுப் பரிசான
GSTPS பெயர் பொதிந்த கோடைக்காலத்துக்கு ஏற்ற அழகான நீர் குடுவை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பிரியப்போகிற வருத்தம்
கொஞ்சம் எல்லோரிடத்திலும் இருந்தது. விடைபெற்று கிளம்பினோம். அடுத்த ஆண்டு இன்னும்
பலரோடு கலகலக்க வருவோம் என மனதில் சொல்லிக்கொண்டோம்.
பயணம் எப்பொழுதும்
மனிதர்களைப் புதுப்பிக்க செய்யும். நிறைய கற்றுத்தரும். இணக்கம் உண்டாக்கும்.
இந்த பயணமும் கடந்த
பயணத்தை விட நேரம் அதிகம். மகிழ்ச்சியும் அதிகம். இனி இன்னும் உற்சாகமாய், ஏற்காடோ,
ஏதேனும் ஊரோ இரண்டுநாள் பயணப்படலாம் என நம்மை பழக செய்திருக்கிறது. உறுப்பினர்கள் இன்னும் நெருக்கமாகியிருக்கிறார்கள்.
சமகாலம் தினசரி
வாழ்க்கை, வளர்ந்து வரும் தொழில்நுட்பம் என பலவும் நம்மை ஒரு வீட்டில் வாழ்ந்தாலும்
தனித்தனியாக மாற்றியிருக்கிறது. மனிதர்கள் மற்றவர்களோடு நன்றாக உரையாடவேண்டும். குடும்பத்தினரோடு
நேரம் (Quanity time) மட்டுமல்ல! ஆரோக்கியமாக (Quality Time) செலவழிக்கவேண்டும் என
வழிக்காட்டுகிறது நவீன மருத்துவம்.
தொடர்ந்து கற்றுக்கொள்வோம்!
இணக்கமாவோம்! வாழ்வில் அடுத்தடுத்த நிலைகளில் உயர்ந்து செல்வோம்!
ஒரு பயணம் என்பது
பல்வேறு திட்டமிடல்களை கொண்டது. உழைப்பு கோரக்கூடியது. இல்லையெனில் பயணம் நல்ல நினைவுகளை
உருவாக்குவது போல கொஞ்சம் கசப்பையும் சேர்த்து தந்துவிடும். எல்லாவித ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த அனைத்து
நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
எல்லோருக்கும்
பயிற்றுவித்து, சிறப்பாக வழிகாட்டுதல்கள் தந்து, எங்களை இயக்கும் சிறந்த ஆசானான செந்தமிழ்ச்செல்வன்
அவர்களுக்கு நன்றி.
- GSTPS
பயணத்தில் நிர்வாகிகளும், உறுப்பினர்களும்
பேருந்து நிறுத்தம் எழும்பூர்
1. Mrs. P. Ponmani + Master Joshva
2. Mr. S. Rajiv
3. Mr. S. Vicky
4. Mr. S. Sathick Basha
5. Mr. R.Thulasiraman (A)
6. Mr. V.Vijayakumar
7. Mr. KS Shanmugam (A)
8. Mr. PR.Srinievasan
9. Mr. Jayakumar
10. Mr. K. Moorthy
நிறுத்தம் : கோயம்பேடு
11. Mr. S.Chandramouli, CA
12. Mr. R Muniasamy
13. Mr. A R ChandraSekar (A)
14. Mr. Senthil Muthu
15. Mr. E. Murugan
16. Mr. Dr. Villiyappan
17. Mrs. Selvarani + Miss. Yamini
18. Mrs. Subha + Miss. Vani
19. Mr. Srinivasan
20. Mr. Mageshkumar (A)
21. Mr. S. Anandhan (A)
நேரடியாக ரிசார்ட் வருபவர்கள்
1. Mr. N. Sugumaran
2. Mr. Selvavinayagam
3. Mr. PM Mohanraj, CA
4. Mr. G.Gubendiran
நிர்வாகிகள்
திரு. செந்தமிழ்ச்செல்வன், தலைவர்
திரு. பாலாஜி அருணாச்சலம், துணைத்தலைவர்
திரு. செல்வராஜ், பொருளாளர்.
திரு. பாலாஜி, செயலர்
திரு. செண்பகம், இணைச்செயலர்
திரு. சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்
திரு. சுந்தர்ராம் கல்யாண், செயற்குழு உறுப்பினர்
திரு. முத்தரசன், செயற்குழு உறுப்பினர்
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987