நாம் மாதம் தோறும் இரண்டு கூட்டங்கள் இணைய வழியாகவும், ஒரு கூட்டம் உறுப்பினர்களுக்காக நான்காவது சனிக்கிழமையன்று மதியம் நேரடிக் கூட்டம் நடத்துகிறோம்.
இந்த முறை இரண்டு தலைப்புகள். இரண்டு பேச்சாளர்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் இனிதே துவங்கியது.
Dr. வில்லியப்பன் அவர்கள் முதல் தலைப்பில் இவே பில் குறித்த மூன்று விரிவான பிபிடிகளை தயாரித்திருந்தார். ஆகையால் விரைவாக கூட்டம் துவங்கப்பட்டது.
இவே பில் குறித்து ஜி.எஸ்.டி செக்சன் 68, விதி 138 என்ன சொல்கிறது, அதில் என்னென்ன விவரங்கள் இருக்கிறது என்பதை விளக்கி, இவேபில் குறித்த வழக்குகளையும், அதன் தீர்ப்புகளையும் சொல்லி, நடைமுறையில் வணிகர்கள் எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள், அதிகாரிகளின் அணுகுமுறை என நடைமுறையில் தன் அனுபவங்களையும் இணைத்து சொன்னது ஒரு நல்ல புரிதலை தந்தது.
இடையிடையே நமது உறுப்பினர்கள் இவே பில் சம்பந்தமாக தாங்கள் எதிர்கொண்ட சிக்கல்களையும், அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்கிற அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்கள். தங்கள் சந்தேகங்களையும் கேட்டார்கள். பதில்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
நேரடிக் கூட்டத்தின் சிறப்பே… பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்வது தான். அதன் மூலம் நாம் ஒரு தெளிவுக்கு வரமுடியும். இந்தக் கூட்டமும் ஒரு நல்ல அனுபவம்.
இரண்டாவது தலைப்பு “தொழில்துறை மோதல்” (Industrial Disputes) . திரு. சதீஷ்குமார் அவர்களுக்கு குறைவான நேரமே இருந்தது. ஆகையால், வரிசைக்கிரமமாக பிபிடி வழியாக விளக்காமல், கேள்வி பதில்கள் மூலம் தான் விளக்க வேண்டிய தலைப்பை விளக்கினார்.
தொழிற்சங்கம்
துவங்க எத்தனை உறுப்பினர்கள் தேவை?
சமீபத்தில்
பரவலாக பேசப்பட்ட சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தின் கோரிக்கைகள் என்னென்ன? பேச்சுவார்த்தையில்
என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன?
நீம்,
FTE திட்டங்கள் என்ன? எதனால் கொண்டுவரப்பட்டது? அதன் சாரம்சம் என்ன? இப்பொழுது அமுலாகி வரும் புதிய திட்டங்கள் என்னென்ன?
தொழிற்சாலையில்
உணவகம் திறப்பது? அதனால் சாதகம் என்ன? பாதகம் என்ன?
நிறுவனம்
– தொழிலாளர் இடையே என்னென்ன பிரச்சனைகள் உருவாகும்? அதை தீர்ப்பதற்கான படிநிலைகள் என்னென்ன?
என்பது
பற்றி தன்னுடைய அனுபவத்தின் வழியாக விளக்கினார்.
இடைவேளையில் ஏசி குளிருக்கு இதமாக, வடை, காபி சூடாக வழங்கப்பட்டது.
நமது சொசைட்டியின் ஆண்டு விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் பயணமாக ஒரு ரிசார்ட் சென்று கொண்டாடி வருகிறோம். இந்த முறை என்ன செய்வது? என தலைவர் கேட்ட பொழுது, ஏற்காடு இரண்டு நாள் பயணம் செய்யலாம் சென்னையிலேயே ஒரு ரிசார்ட்டுக்கு முதல் நாள் மதியம் சென்று, அடுத்த நாள் மதியம் கிளம்பி வரலாம் என ஆலோசனையாக உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். பிறகு நிர்வாகிகள் ரிசார்ட், மற்ற விசயங்கள் குறித்து விசாரித்து குழுவில் தெரிவிப்பதாக அறிவித்தார்கள். எல்லோரும் தங்கள் கருத்துகளை பகிருங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்கள்.
அடுத்து சொசைட்டியின் பொதுக்குழு நடைபெற இருக்கிறது. நிர்வாகிகள் தேர்வு (Election) இருக்கிறது. அதற்கும் விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்கள்.
மாணவர்களுக்கான, புதியவர்களுக்கான ஜி.எஸ்.டி வகுப்பு குறித்த அம்சங்களையும் தெரிவித்தார்கள்.
கூட்டம் இனிதே நிறைவேறியது.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment