வணக்கம். கடந்த சனிக்கிழமை (04/11/2023) அன்று GSTPS சார்பாக நடந்த 125வது ஜூம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நமது உறுப்பினர்களுடன், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள்.
நமது GSTPS சொசைட்டியின் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கூட்டத்தை துவங்கி வைத்தார். ”கடந்த நான்கு ஆண்டுகளாக 125 ஜூம் வழிக் கூட்டங்களையும், 25 நேரடிக்கூட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். இனிமேலும் தொடர்ந்து பயணிப்போம்” என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
கொரானா உலகம் முழுவதும் சில லட்சங்களில் மனித உயிர்களை காவு கொண்டு போனது. பலருக்கும் மரண பயத்தை காட்டிச் சென்றது. இப்படி பல மோசமானவற்றை கடந்தாலும், மனித இனம் வரலாறு முழுவதும், அதிலிருந்து மீள்வதற்கு புதிய புதிதாய் பலவற்றை விஞ்ஞானத்தின் உதவியால் கண்டுப்பிடித்து மீண்டும் வந்திருக்கிறது.
அப்படித்தான் மனிதர்கள் வீட்டுக்குள் முடங்கிய பொழுதும், இணையத்தின் மூலமாக நாம் தொடர்புகொண்டோம். படித்தோம். விவாதித்தோம். வேலையை கூட இணையத்திலேயே மேற்கொண்டோம். முந்தைய வழக்கப்படி நேரடிக்கூட்டங்களை மட்டும் நடத்தியிருந்தால், வருடத்திற்கு 12 கூட்டம் எனக் கணக்கிட்டால், நான்கு வருடங்களில் 50 கூட்டங்களை தாண்டியிருக்கமாட்டோம். ஜூம் வழிக் கூட்டங்கள் நடத்துவதின் மூலம் இன்றைக்கு 125 கூட்டங்களை எட்டியிருக்கிறோம்.
நமது இந்த பயணத்தைப் பாராட்டி, மூன்று முக்கியமானவர்கள் நமக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். கடந்த சில வருடங்களாக, எந்த கூட்டத்திலும் பங்கேற்காமல் இருக்கும் கோவையைச் சேர்ந்த மூத்தவரும் வரி ஆலோசகருமான திரு. நஜூமுதீன் அவர்கள் நாம் தொடர்ந்து உற்சாகமாக இயங்குவது குறித்து வாழ்த்து தெரிவித்தார். நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் மீதான தனது அன்பையும் வெளிப்படுத்தினார். விடை பெறும் பொழுது, ஏகப்பட்ட அறிவிப்புகளையும், திருத்தங்களையும் தொடர்ந்து கொடுத்து வரி ஆலோசகர்களை கிறுகிறுக்கவைக்கும் ஜி.எஸ்.டிக்கும் ஒரு குட்டு வைத்து சென்றார்.
கோவையில் பி.எஸ். அகாடமி என்ற ஒரு நிறுவனத்தை துவங்கி, தங்களது தொழிலில் மிகவும் உற்சாகமாக இருக்கும் வேளையிலும், வரி ஆலோசகர்களுக்கும், இந்த துறையில் உள்ளவர்களுக்கும் உதவும் பொருட்டு, பல பயிலரங்குகளை நடத்தி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிக்கும் வரி ஆலோசகர்களாக இயங்கும் திரு. பெருமாள், திரு. சேது இருவரும் தங்களது வாழ்த்துகளையும் நமக்கு தெரிவித்தார்கள்.
திரு பெருமாள் அவர்களின் மகள் ஹரிணி அவர்கள் வழக்கறிஞராக சென்னையில் உயர்நீதிமன்றத்தில் இயங்குவது நம்மில் பலருக்கும் தெரியும். சமீபத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. குடும்ப நிகழ்ச்சித் தொடர்பாக சென்னை வந்த பொழுதும், தலைவரோடு ஜூம் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். ”சொந்த வேலைகளை கவனியுங்கள்” என தலைவர் சொன்னாலும், அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, நம் கூட்டத்தில் கலந்துகொண்டார் என தலைவர் சொன்ன பொழுது, அவர் நமது தலைவர் மீது வைத்திருக்கும் அன்பும், மதிப்பும் புரிந்தது.
நமது தலைவர் தொடர்ச்சியாக தமிழ்நாடு தழுவிய அளவிலும், இந்திய அளவிலும் பல வரி ஆலோசகர்களின் கூட்டமைப்புகளோடு நல்ல உறவு பேணுவதாலேயே இதெல்லாம் சாத்தியமாகிறது. நல்ல உறவு பேணுவது என்பது அபரிமிதமான அன்பும், பெரும் உழைப்பும் கோரக்கூடியது. அவர்களுடைய அழைப்பின் பேரில் கூட்டங்களில் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார். அவர்களுடைய மாநாடு, விழா என அழைக்கும் பொழுது, மதுரை, பாண்டிச்சேரி என தூரம் எவ்வளவு என்றாலும் சளைக்காமல் பல ஊர்களுக்கும் பயணிக்கிறார். அவர்களுடைய குடும்ப விழாக்களில் பங்கெடுக்கிறார். தலைவரிடமிருந்து இந்த நல்ல பண்பை நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என உணர்கிறேன்.
நமது இணைச்செயலர் செண்பகம் அவர்கள் GSTR9C குறித்து ஒரு நிறுவனத்தின் கணக்கின் மூலமாகவே தெளிவாக விளக்கினார். பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும், செயலர் பாலாஜியும், இணைச்செயலரும் இணைந்து பதிலளித்தது சிறப்பாக இருந்தது.
அன்றைக்கு நேரடிக் கூட்டத்தில் இந்த தலைப்பு குறித்து நமது துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் தான் விளக்கவேண்டியிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லை. நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள் என சொன்னதும், இணைச்செயலர் செண்பகம் அந்த பொறுப்பை தயங்காமல் உடனே ஏற்றுக்கொண்டார். இப்படி ஏற்றுக்கொண்டதன் மூலம் இணைச்செயலர் என்பதை நிரூபித்துவிட்டார். அவருக்கு உறுப்பினர்கள் சார்பாக நன்றி.
நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102
No comments:
Post a Comment