அனைத்து உறுப்பினர்களுக்கும் நமது மதிப்பிற்குரிய தலைவரின் அன்பான அழைப்பு. . !
அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் 125 ஜூம் கூட்டங்களையும், 26 நேரடி கூட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.
ஜி.எஸ்.டிக்காகவும், வருமான வரிக்காகவும் தினசரி தகவல்களை பகிர இரண்டு வாட்சப் குழுக்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். நமது வெற்றி பயணத்தில் வெகு குறுகிய காலத்தில் முகநூல், யூடியூப், வலைப்பக்கம், மின் இதழ் என துவங்கி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். பொதுவெளியிலும் வெளியிடுவதால் நமது உறுப்பினர்கள் மட்டுமில்லாமல் தமிழகம் தழுவிய அளவில் பலரும் பயனடைந்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியில் இப்பொழுது ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 1 முதல் பிரிவு 179 வரை, பிரிவு வாரியாக விதிகள், திருத்தம் மற்றும் வழக்குச் சட்டங்களுடன் அறிவிப்புகள் என்பதை துவக்கம் முதல் இறுதி வரை பயிற்றுவிக்கும் நோக்கத்தில் ஒரு புதிய படிப்பு வட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பயணம் உங்கள் ஜிஎஸ்டி அறிவை வளப்படுத்தி, உங்கள் தொழில் வளர்ச்சிக்கு ஆரோக்கியமாக நிச்சயம் பங்களிக்கும்.
இந்த படிப்பு வட்டத்தின் முதல் அமர்வை நவம்பர் 25, 2023 முதல் உற்சாகமாக தொடங்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு அமர்வும் ஒரு மணிநேரம் நடத்துவது பொருத்தமானது என யோசித்துள்ளோம். ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று நமது நேரடி சந்திப்புகளின் போது சிறந்த ஆசிரியர்கள் இந்த அமர்வை நடத்துவார்கள்.
படிப்பு வட்டம் குறித்து விவாதித்து திட்டங்களை வகுக்க தனி ஆய்வு குழு ஒன்றை அமைக்க இருக்கிறோம். இந்த வகுப்புகளில் பங்களிக்க விரும்பும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களை தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். அனைத்து உறுப்பினர்களும் வகுப்புகளை எடுக்கவும் வாய்ப்புகளை வழங்குகிறோம்.
முன்வரும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான, அவசியமான பாடத்திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். பாடத்திட்டம் தேர்தெடுப்பது, எப்பொழுது எடுப்பது என அனைத்தையும் கலந்து பேச நமது தலைவரைத் தொடர்பு கொள்ளுங்கள். முடிவு செய்யப்பட்ட தலைப்பு குறித்த குறிப்புகளை, பிபிடிகளை தயாரித்து இரண்டு வாரங்களுக்கு முன்பே சமர்ப்பித்தல் அவசியமானது. தேவையான ஆலோசனைகளை அப்பொழுது தான் வழங்க முடியும்.
நாம் எடுக்கும் வகுப்புகளை முறையாக காணொளி பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளோம். எடுத்த வகுப்புகளை தொகுத்து எதிர்காலத்தில் சொசைட்டியின் பெயரில் GST பற்றிய புத்தகமாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்.
இந்த வகுப்புகளைத் தொடங்கும் இந்நாளில் இரண்டு அருமையான திருக்குறள்களை மனதில் கொள்வோம்.
”தொட்டனைத் தூறுமணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக்கொண்டே இருக்கும்.
”தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.”
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
திருக்குறளில் அருமையாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி வகுப்புகளை எடுப்பது நிச்சயமாக நமது அறிவை வளப்படுத்தும்.
அனைவரின் வளர்ச்சிக்காக தொடங்கும் இந்தப் படிப்பு வட்டத்தில் ஆர்வத்துடன் இணைய முன்வாருங்கள் என நமது சொசைட்டி அனைத்து உறுப்பினர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.
அன்புடன்,
- GSTPS
பின்குறிப்பு : எங்களது கூட்டம் தொடர்பான செய்திகள், மின்னிதழ் போன்ற விவரங்களை பெற விரும்புகிறவர்கள் எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவியுங்கள். இந்தப் பதிவின் கீழ் உங்களது மின்னஞ்சலை தெரிவியுங்கள்.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment