Wednesday, April 30, 2025

GSTPS : Eway Bill - ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்படாத நபர்களுக்கான மின்வழிச் சீட்டு உருவாக்க புதிய படிவம்


சு செந்தமிழ்ச் செல்வன்

ஜிஎஸ்டி தொழிலாற்றுநர்                  

அலைபேசி :98412 26856

  

ஏன் மின்வழிச் சீட்டு (இ-வே பில்) தேவைப்படுகிறது?

ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 68,ஒருகுறிப்பிடப்பட்ட தொகையை விட அதிகமான மதிப்புள்ள பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தின் மூலம் எடுத்துச் செல்லும் போது வாகனத்தின் பொறுப்பாளர், பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள் (மின் வழி பில்) மற்றும் சாதனங்களை தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விதி 138பரிந்துரைக்கிறது. ஜூன் 2, 2018 முதல் தமிழ் நாட்டில் இ-வே பில் நடைமுறைக்கு  வந்தது,

 


மின்வழிச் சீட்டு ( இ-வே  பில் ) என்றால் என்ன?

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் ஒரு பொருளை விற்பனை செய்யும் வரி செலுத்துபவர், அதை போக்குக்குவரத்து வாகனம் மூலம் ஒரு மாநிலத்துக்குள் கொண்டு  செல்ல அல்லது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு  செல்ல வலை  தளத்தில்மின்னணு முறையில் உருவாக்க வேண்டிய ஒரு  ஆவணமே மின்வழிச் சீட்டு ( இ-வே  பில் ) ஆகும்.

 

இ-வே பில் உருவாக்குவதற்கான வரம்பு  எவ்வளவு ?

 

இந்தியா முழுவதும் .ரூ 50,000 க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கும், தமிழ்நாட்டில் மாநிலத்துக்குள் ரூ 1, லட்சத்திற்கு மேல் பொருட்களை கொண்டு செல்லும்போது, மின்னணு முறையில் இ-வே பில் (e-way bill) உருவாக்குவது கட்டாயமாக்கப்  பட்டுள்ளது.

 

இ-வே பில்களை யார் உருவாக்க முடியும்?

 

         பதிவு செய்யப்பட்ட நபர்.

         பதிவுசெய்யப்படாத நபரால் பதிவுசெய்யப்பட்ட நபருக்கு சப்ளை செய்யப்பட்டால், பொருட்களைப் பெறுபவர் இ-வே  பில் பில்களை உருவாக்குவதற்கு பொறுப்பாவார்.

         ஒரு சப்ளையர் மூலம் மின்-வே பில்களை உருவாக்கவில்லை என்றால், ஒரு டிரான்ஸ்போர்ட்டர் பொறுப்பாவார்.

பதிவு செய்யப்படாத டிரான்ஸ்போர்ட்டர்களுக்கு, இ-வே பில் போர்ட்டலில் பதிவு செய்யும் போது அவர்களுக்கு டிரான்ஸ்போர்ட்டர் ஐடி வழங்கப்படும்.

 

மின் வழி பில்அமைப்பில் பதிவுசெய்தல்

மின் வழி பில் அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நபரும் மின் வழி பில் எண்களை உருவாக்கலாம். ஜிஎஸ்டிஅமைப்பில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் ஜிஎஸ்டி அடையாள எண்ணை (GSTIN) வைத்திருக்கும் சப்ளையர், பெறுநர்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் GSTIN ஐப் பயன்படுத்தி மின் வழி பில் அமைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

 

பதிவு செய்யப்படாத நபர்:

சிஜிஎஸ்டிசட்டத்தின் பிரிவு 2(84) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத நபரை பதிவு செய்யப்படாத நபர் (URP) என்று அழைக்கப் படுவார்.  உதாரணமாக, ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கும் குறைவான வருவாய் உள்ள நபர்கள் ஜிஎஸ்டிபதிவைப் பெற வேண்டிய அவசியமில்லை, எனவே அவர்கள் பதிவு செய்யப்படாத நபராக வகைப்படுத்தப்படுவார்கள். இருப்பினும், அத்தகைய பதிவு செய்யப்படாத நபர்கள் தங்கள் வழக்கமான வணிக செயல்முறையின் ஒரு பகுதியாக பொருட்களை கொண்டு செல்ல வேண்டியிருக்கலாம்.

 

பதிவு செய்யப்படாத நபர்களுக்கான புதிய படிவம்:

பொருள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்படாத நபர்கள்  இ-வே பில்களை உருவாக்க உதவும் வகையில், பிப்ரவரி 11, 2025 முதல், இந்திய அரசு இ-வே பில் (EWB) முறையில் படிவம் ENR-03 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி சட்டத்தில் அறிவிப்பு எண் 12/2024ஜூலை 10, 2024  இன் படி,  பதிவு செய்யப்படாத வணிகர்கள்/நபர்கள்GSTIN க்கு மாற்றாக செயல்படும் EWB போர்ட்டலில் பதிவுசெய்து ஒரு தனித்துவமான பதிவு ஐடியைப் பெற அனுமதிக்கிறது.. இதற்காக இ-வே பில் உருவாக்குவதற்கான படிவம் ENR-03 பிப்ரவரி 15, 2025 முதல் நடைமுறைக்கு  வந்துள்ளது. .

 


பொருட்களை நகர்த்துதல் அல்லது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்படாத வணிகர்கள்/நபர்கள்   இப்போது EWB போர்ட்டலில் தங்களைப் பதிவுசெய்து ஒரு தனித்துவமான  பதிவு ஐடியைப் பெறுவதன் மூலம் மின்-வழி பில்களை உருவாக்கலாம் . இந்த ஐடி மின்-வழி பில்களை உருவாக்குவதற்கு சப்ளையர் GSTIN அல்லது பெறுநர் GSTIN க்கு மாற்றாக செயல்படும்.

 

ENR-03 சேர்க்கைக்கான பயனர் வழிகாட்டி

 

1. ENR-03 ஐ அணுகுதல்:

a) அறிவிப்பின்படி,  பதிவு செய்யப்படாத ஒருவர் (URP)  படிவம் ENR-03 ஐப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

b) EWB போர்ட்டலின் பிரதான மெனுவில் உள்ள "பதிவு" கட்டத்தின் (tab) கீழ் இந்த விருப்பம் இருக்கும்.

 

2. ENR-03 படிவத்தை நிரப்புதல்:

 

a) விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தவுடன், பதிவுத் திரை காண்பிக்கப்படும்.

b) விண்ணப்பதாரர் தங்கள்  மாநிலத்தை தேர்ந்தெடுத்தப் பின் அவருடைய  நிரந்தர கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும், அது சரிபார்க்கப்படும்.

c) சேர்க்கை வகையைத் தேர்ந்தெடுத்தப்பின்  முகவரி விவரத்தை பூர்த்தி செய்ய  வேண்டும்.

d) ஒரு  மொபைல் எண்ணை  உள்ளிட வேண்டும், அது OTP மூலம் சரிபார்க்கப்படும்.

3. உள்நுழைவு சான்றுகளை உருவாக்குதல்:

a)விவரங்களைச் சமர்ப்பிக்கும் முன் பயனர் ஒரு  பயனர்பெயரை உருவாக்கி, அதன் கிடைக்கும் தன்மையைச் சரிபார்த்து,  கடவுச்சொல்லை அமைக்க வேண்டும்.

b) வெற்றிகரமாக சமர்ப்பித்தவுடன்,  15 எழுத்துகள் கொண்ட ஒரு பதிவு ஐடி  உருவாக்கப்படும், மேலும் ஒரு ஒப்புகை காட்டப்படும்.

c) இந்தப் பதிவு ஐடியை GSTIN-க்குப் பதிலாக மின்-வழி பில்களை உருவாக்கப் பயன்படுத்தலாம்.

 

4. இ-வே பில் உருவாக்குதல்:

 

a)இ-வே பில் உருவாக்கபதிவுசெய்யப்பட்ட ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்படாத வணிகர்கள்/நபர்கள்  (URP), பதிவுசெய்யப்பட்ட சான்றுகளைப் பயன்படுத்தி EWB போர்ட்டலில் உள்நுழையலாம்.

 

b) 'புதியதை உருவாக்கு' விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ,பதிவு ஐடி சப்ளையர்/பெறுநராக தானாக நிரப்பப்படும்.

 

c) மின்-வழி பில் உருவாக்கத்தைத் தொடர்வதற்கு முன் பிற தொடர்புடைய விவரங்களை உள்ளிட வேண்டும்.


 

மின்-வழி பில்களை எவ்வாறு உருவாக்குவது ?


படி 1 - நீங்கள் URP ஆக உருவாக்கிய பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி  https://ewaybillgst.gov.in/ இல் உள்நுழையவும்  .

 

படி 2 - பிரதான மெனு வழியாக e-Waybill>>Generate New என்பதற்குச் செல்லவும். 'Generate New' என்பதைக் கிளிக் செய்யவும்.

 

படி 3 - மின்-வழி பில் நுழைவுப் படிவம் அடங்கிய பக்கம் திரையில் தோன்றும். EWB அமைப்பு, URP-க்கு குறிப்பிட்ட 15-இலக்க பதிவு எண்ணுடன் மின்-வழி பில் நுழைவுப் படிவத்தை தானாக நிரப்புகிறது. 

 

படி 4 - 'பரிவர்த்தனை வகை', 'ஆவண வகை', 'பொருள் விவரங்கள்' மற்றும் 'போக்குவரத்து விவரங்கள்' தொடர்பான விவரங்களை நிரப்பவும். மின்-வழி பில் நுழைவு படிவத்தில் உள்ள அனைத்து கட்டாய பகுதிகளை நிரப்பிய பிறகு 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.

 

URP (பதிவு செய்யப்படாத நபராக) சமர்ப்பித்த அனைத்து விவரங்களும் செல்லுபடியாகும் என்றால், கணினி EWB-01 படிவத்தில் ஒரு தனித்துவமான 12 இலக்க E-Way பில் எண்ணுடன் ஒரு E-Way பில்லை உருவாக்குகிறது.

 

திவு செய்யப்படாத நபர்களுக்கான முக்கிய பரிசீலனைகள்

 

EWB போர்ட்டலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட GST படிவம் ENR-03 அம்சம், பதிவு செய்யப்படாத நபர்கள் மற்றும் அவர்களுடன் வணிகம் செய்யும் GSTIN வைத்திருப்பவர்கள் இருவருக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.

இது URP-களுக்கு புதிய மின்-வழி பில்களை உருவாக்குவதை எளிதாக்குகிறது, ஏனெனில் அத்தகைய நபர்கள்களுக்கு இனி ஜிஎஸ்டிபதிவு தேவையில்லை.

URP-களில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் ஜிஎஸ்டிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க நன்கு ஆவணப்படுத்தப்படுகின்றன.

சிறிய வணிகர்கள் ஜிஎஸ்டி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க பொருட்களை நகர்த்துவது எளிதாகிறது

 

போக்குவரத்து செய்பவர் பதிவு செய்யப்படாத நபராக இருந்தாலும், அவர்சப்ளையர்கள் மற்றும் பெறுநர்கள் சார்பாக மின் வழி பில்லை உருவாக்க முடியுமா?

 

மின் வழி பில் எண்களை மின் வழி பில் முறையில் பதிவுசெய்த நபர்களால் உருவாக்க முடியும். போக்குவரத்து செய்பவர் பதிவு செய்யப்படாத நபராக இருந்தால், மின் வழி பில் எண்களை உருவாக்க தகுதி பெற அவர்/அவள் மின் வழி பில் அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். மின் வழி பில் அமைப்பில் பதிவு செய்தவுடன் , போக்குவரத்து செய்பவருக்கு பொதுவான பதிவு எண் அல்லது போக்குவரத்து ஐடி எனப்படும் தனித்துவமான 15 இலக்க அடையாள எண் வழங்கப்படுகிறது . மின் வழி பில் எண்ணை உருவாக்கும் போது இந்த போக்குவரத்து ஐடியைக் குறிப்பிட வேண்டும்.

 

பதிவு செய்யப்படாத நபரான போக்குவரத்துதாரர், மின்-வழி பில் அமைப்பில் சேரவில்லை என்றால், சப்ளையர்கள் அல்லது பெறுநர்களால் உருவாக்கப்படும் மின்-வழி பில்களை வைத்து வாகன விவரங்களை அவர்  புதுப்பிக்க முடியுமா?

 

வாகன விவரங்களை மின்-வழி பில்  உருவாக்குபவர் அல்லது போக்குவரத்து ஐடி குறிப்பிடப்பட்டிருந்தால் போக்குவரத்து நிறுவனம் புதுப்பிக்கலாம். போக்குவரத்து நிறுவனம் பதிவுசெய்யப்பட்ட நபராக இருந்தால் போக்குவரத்து நிறுவனம் ஐடி GSTIN ஆகவோ அல்லது பதிவு செய்யும் போது மின்-வழி பில் அமைப்பால் வழங்கப்படும் தனித்துவமான ஐடியாகவோ இருக்கலாம்.

 

 போக்குவரத்து செய்பவராகப் பதிவு செய்தல்

 

பதிவு செய்யப்படாத நபர் மின்-வழி பில்  முறையில் போக்குவரத்து செய்பவராகப் பதிவு செய்யப்படவில்லை என்றால், அவர்களால் வாகன விவரங்களைப் புதுப்பிக்க முடியாது. எனவே, போக்குவரத்து பரிவர்த்தனை மற்றும் மின்-வழி பில் செயல்முறையை இடையுறு  வைத்திருக்க, ஒரு போக்குவரத்து செய்பவர் பதிவு செய்வது சிறந்தது.

 

- தமிழ் தொழில் உலகம்-ஏப்ரல் 2025 இதழில் இந்தக் கட்டுரை வெளிவந்தது.

 

- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

No comments:

Post a Comment