Sunday, November 2, 2025

ஒரு வரி ஆலோசகருக்கு நகைச்சுவை உணர்வு (Humor Sense) ஏன் அவசியம்?


வரி
ஆலோசகரின் நாட்கள் எளிதானவை அல்ல. சிக்கலான சட்டங்கள், குறைபாடுகளுடனான கணக்கு, எப்பொழுதும் காலக்கெடுவிற்குள் வேலையை முடிக்க மல்லுக்கட்டுவது, அதிகாரிகளின் சிடுசிடு கேள்விகள்,  வரித் தளங்களின் இழுத்தடிப்புகள், தொங்கல்கள் என எல்லாமுமாய் சேர்ந்து வாழ்க்கையே ஒரு சுழலுக்குள் சிக்கியது போல தோன்றும்.

 

இப்படிப்பட்ட சூழலில் மனதை சமநிலைப்படுத்தி, நிதானமாக புன்னகைத்துக் கொண்டே செயல்பட உதவுவதுநகைச்சுவை உணர்வு தான்.

 

 சிரிப்பு என்பது உயிரின் சமநிலையை காப்பாற்றும் அறிவு.”

மகாத்மா காந்தி

 

நகைச்சுவை உணர்வு என்ன தரும்?

 


1. மன அழுத்தம் கரையும். சின்ன புன்சிரிப்பு மனதைக் குளிர்விக்கும்.

 

2. வாடிக்கையாளர்கள் நெருக்கம் பெறுவர். சிரிப்புடன் பேசும் ஆலோசகர் எளிதில் நம்பிக்கையைப் பெறுவார்.

 

3. கடுமையான விவாதங்களும் மென்மையாவதுண்டு. கோபத்தையும் பதட்டத்தையும் சிரிப்பு நிமிடத்தில் உருகச் செய்கிறது.

 

4. அணி உறவுகள் வலுப்படும். அலுவலகத்தில் சிரிப்பு பரவியால் ஒற்றுமையும் பெருகும். வேலையில் லகுத்தன்மை வரும்.

 

5. சொல்வதெல்லாம் நினைவில் நிற்கும். நகைச்சுவையுடன் கூறிய விளக்கம் மனதில் தங்கும்.

 

6. நல்ல அபிமானம் உருவாகும். சிரிக்க தெரிந்தவர் “அன்பும் அறிவும் கலந்த நிபுணர் எனப் பார்க்கப்படுவார்.

 

7. தோல்வியையும் இலகுவாக ஏற்றுக் கொள்வது எளிதாகும். சிரிப்பவன் தோல்வியிலும் தெளிவை காண்கிறான்.

 

 சிரிக்கக் கூடியவன் எதையும் சமாளிக்கக் கூடியவன்.” மார்க் ட்வெயின்

 

நகைச்சுவை உணர்வை வளர்ப்பது?

 

1. விசயங்களைத் தீவிரமாகப் பாருங்கள். சில தவறுகள் கற்றுத்தரும் என என சொல்லிக்கொண்டு ஏற்றுகொள்ளுங்கள்.

 

2. ஒவ்வொரு சிரமத்திலும் ஒரு சிறிய சுவாரஸ்யம் மறைந்து இருக்கும். கண்டுபிடிக்கப் பழகுங்கள்.

 

3. மரியாதையுடன் நகைச்சுவைச் சொல்லுங்கள்.  எப்பொழுது எதைச் சொல்வது என்பதைப் புரிந்தால் அது கலை.

 

4. நல்ல நகைச்சுவைப் படைப்புகளைப் படியுங்கள், கேளுங்கள், சுற்றி நடப்பனவற்றை சின்ன புன்வுறுடலுடன் பாருங்கள்.

 

5. பிறரின் உணர்ச்சியை மதித்து நகைச்சுவை பேசுங்கள்.  நகைச்சுவை அன்போடு கலந்திருக்கும்போது மட்டுமே அது நயமாகும்.

 

இறுதியாக...

 

நகைச்சுவை உணர்வு என்பது கேலிச் சொல் அல்ல; அது ஒரு உளவியல் வலிமை,

ஒரு மன சமநிலைப் பயிற்சி.

 

ஒரு வரி ஆலோசகர் சிரிக்கத் தெரிந்தால், அவரின் அலுவலகம் கணக்கு அறையாக இல்லாமல் அறிவும் அமைதியும் நிறைந்த அரங்கம் ஆக மாறும்.

 

"நகைச்சுவை படைப்பாற்றலை அதிகரிக்கிறது, சுய கண்காணிப்பை எளிதாக்குகிறது, மேலும் அறிவாற்றல் மற்றும் நடத்தை மாற்றங்களைத் தூண்டுகிறது."  - Paul Hawken

 

-         -  இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டிவருமானவரிபி.எப்.எஸ்.ஆலோசகர்,

9551291721


No comments:

Post a Comment