Saturday, February 10, 2024

EPF : தொழிலாளிகளுக்கான பிரத்யேகமான தளத்தை ஒரு தொழிலாளி எவ்வாறு பயன்படுத்துவது? – அத்தியாயம் 5

 


தொழிலாளிக்கான பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

 

இதற்கு முந்தைய நான்கு அத்தியாயங்களை நமது GSTPS தளத்தில் கீழ்க்கண்ட முகவரியில் சென்று படிக்கலாம்.

https://gstprofessionalssociety.blogspot.com/2023/10/gstps-how-to-use-employee-pf-site.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/11/epf-2.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/12/epf-3.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/01/epf-4.html




கடந்த அத்தியாயத்தில் நாம் Claim form 19 வரை விரிவாக பார்த்தோம்.

 

Online Services

1.       Claim form 31, 19, 10C & 10D

2.       One member – One EPF account (Transfer Request)

3.       Track Claim Status

4.       Download Annexure K

 

இந்த அத்தியாயத்தில் Claim Form 10C குறித்து விரிவாக பார்க்கலாம்.

 

இந்த விண்ணப்பம் என்பது நாம் நம்முடைய பி.எப் ஓய்வூதிய (Pension) கணக்கில் செலுத்திய மொத்தப் பணத்தையும் திரும்ப பெறுவதற்கான விண்ணப்பம் ஆகும்.

 

தொழிலாளி தன்னுடைய பணிக்காலம் முழுவதும் வேலை செய்து, ஓய்வு பெறும் காலமான 58 வயது நிறைவு பெற்றதற்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து வாங்குவது தான் சரியானது. (அதற்கு விண்ணப்பம் வேறு தனியாக இருக்கிறது.)  இப்படி பணி ஓய்வுக்கு பிறகு வாழ்வாதாரத்திற்கும், மருத்துவ செலவுகளை எதிர்கொள்வதற்கு தான் இந்த ஓய்வூதியம் பயன்படுத்துவதற்காக தான் இந்த திட்டமே ஏற்படுத்தப்பட்டது.

 

இந்த திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அல்லது தங்களது சமகால நெருக்கடிகளை மனதில் கொண்டு, தொழிலாளர்கள் இந்த நிதியை திரும்ப பெற முனைகிறார்கள்.  பி.எப்.பும் அதை அனுமதிக்கிறது.

 

ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, வேலையில் இருந்து நின்ற பிறகு இன்னொரு நிறுவனத்தில் இரண்டு மாதம் வரை இணையாத பொழுது, அதுவரைக்கும் நாம் செலுத்திய  ஓய்வூதிய பணத்தை முழுவதுமாக திரும்ப பெறுவதற்கு இந்த விண்ணப்பத்தை பயன்படுத்தவேண்டும்.

 

எட்டு மாதங்களுக்கு குறைவாக வேலை செய்தால்… ஓய்வூதிய கணக்கில் செலுத்திய பணத்தை திரும்ப பெறமுடியாது.  பி.எப். இந்த ஓய்வூதிய பணத்தை திரும்ப செலுத்துவதற்கு சில விதிகளை உருவாக்கியுள்ளது.  அடுத்து நீங்கள் ஒரு நிறுவனத்தில் இணையும் பொழுது, எட்டு மாத காலத்திற்கு கீழே செலுத்தப்பட்ட தொகை உங்கள் கணக்கிற்கு வந்துவிடும். அதை வாங்கவே முடியாது என்று நினைக்க தேவையில்லை.

 

அதே போல  ஒன்பது ஆண்டுகளும், ஆறு மாத காலத்தையும் நாம் தாண்டிவிட்டால், பணிக்கால ஓய்வுக்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியம் தான் பெறமுடியுமே தவிர, இந்த நிதியை நாம் பெற முடியாது.

 

மேலும், 10C விண்ணப்பிதற்கு முன்பாக, பி.எப் பணத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம் 19 ஐ பூர்த்தி செய்த பிறகு, 10C ஐ பூர்த்தி செய்வது சரியானது.  இல்லையெனில், பி.எப். உங்கள் விண்ணப்பத்தை ஏற்காமலோ, திருப்பி அனுப்பியோவிடும்.




விண்ணப்பிப்பதற்கான தேவையான அம்சங்கள்.

 

1. தொழிலாளியின் ஆதார் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அது நிறுவனத்தினரால், டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

 

(ஒரு தொழிலாளிக்கு ஆதார் இல்லையென்றால் என்ன செய்வது? ஆதார் இல்லாமல் இப்பொழுது யாரும் இருக்கமுடியாது. என முடிவெடுத்து, அப்படி இருந்தால், பி.எப் திட்டத்தில் இணைய முடியாத நிலையை கடந்த சில வருடங்களாக உருவாக்கிவிட்டது.)

 

2.       தொழிலாளியின் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.  அதுவும் நிறுவனத்தினரால்,  டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

 

(அப்பா/கணவர்/மனைவி என இணைப்பு (Joint Account) கணக்காக நிச்சயம் இருக்க கூடாது.  தொழிலாளிக்கு என தனியாக இருக்கவேண்டும். ஆதாரில் உள்ள பெயர், முதல் எழுத்து எல்லாம் வங்கி கணக்கோடு சரியாக ஒத்துப்போகவேண்டும் என்பது முன்நிபந்தனை. அப்படி ஏதாவது வித்தியாசம் இருந்தால் அதனை உரிய முறையில் விண்ணப்பிடித்து சரி செய்துகொள்ளவேண்டும்.

 

3.       நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை குறிப்பிட்டு இருக்கவேண்டும்.  இதை நிறுவனமும் செய்யலாம்.  தொழிலாளியும் செய்யலாம். தொழிலாளியே செய்யும் பொழுது சரியான தேதியை குறிப்பிடவேண்டும். தவறாக குறிப்பிடும் பட்சத்தில் அதை சரி செய்வதற்காக அலைய வேண்டியிருக்கும்.

 

4.   ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால், இக்கட்டுரையின் படி செய்தால் போதுமானது.  அவரே இரண்டு, மூன்று நிறுவனங்களில் வேலை செய்தவராய் இருந்தால்,  கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு முந்தைய கணக்குகளை முறையாக (Transfer) விண்ணப்பித்து ஒரு கணக்காக மாற்றவேண்டும் என்பது மிக அவசியம்.

 

5.       தொழிலாளியின் பான் கணக்கு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அதுவும் நிறுவனத்தினரால்,  டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இருக்கவேண்டும்.

 

 

மேற்கண்ட விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில்,  நாம் பணத்தைப் பெற விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பத்தை திறந்த பிறகு, அதில் வங்கி விவரத்தை சரி செய்வதற்கு ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்.  அதை நிரப்பவேண்டும்.

 

இறுதியில்  தொழிலாளியினுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் (One time Password). அதை இட்டு நிரப்பும் பொழுது, விண்ணப்பம் பூர்த்தியடையும்.

 

மேற்சொன்ன எல்லா அம்சங்களும் சரியாக பொருந்தும் பட்சத்தில், அதிகப்பட்சம் ஒரு மாதத்திற்குள் பணம் தொழிலாளியின் வங்கி கணக்கிற்கு வந்துவிடும்.  இல்லையெனில், பி.எப். நிராகரித்துவிடும்.  அதற்குரிய காரணத்தையும் தொழிலாளியுனுடைய பாஸ்புக் தளத்தின் உள்ளே போய் பார்த்தால், பி.எப் குறிப்பிடுகிறது.  என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டு, சரி செய்து, மீண்டும் விண்ணபித்தால், பணம் வந்துவிடும்.

 

இன்னும் வளரும்.

 

இரா. முனியசாமி,

GSTPS உறுப்பினர்

9551291721


- GSTPS மாதந்தோறும் கொண்டு வரும் மின்னிதழில் ஜனவரி 2024 மாத இதழில் வெளிவந்தது.


     தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/

No comments:

Post a Comment